புதன், ஜூலை 6

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 5


சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை

கேட்பு அறிவிக்கையில் குறிப்பிட்ட 60 நாட்கள் முடிந்தவுடன் வங்கி  சொத்தை கையகப்படுத்த SARFAESI சட்டம் 2002 ல் கண்டுள்ள விதி 13 (4) படி அடமான சொத்தை கையகப்படுத்தும்.   இந்த நடைமுறையை இருவகையாக பிரிக்கலாம். முதலாவது பெயரளவு  (Symbolic) கையகப்படுத்தும் நடவடிக்கை இரண்டாவது (Physical) உண்மையில் சொத்தை கையகப்படுத்துவது ஆம் இதில் வீட்டின் உரிமையாளரை வீட்டிலிருந்து வெளியேற்றுவது.

இந்த நடவடிக்கையை சற்று விரிவாக பார்ப்போம்.  வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அதாவது முதன்மை மேலாளர்                (Chief Manager & above) தகுதிக்கு மேற்பட்டவர் சொத்துடமையாக்கல் அறிவிக்கையை குறிப்பிட்ட சொத்தின் மீது ஒட்டி அவ்வாறு ஒட்டியதற்கு ஆதாரமாக ஒரு நிழற்படமும் எடுத்துக் கொள்வார்.  பின்பு சொத்துடமையாக்கல் அறிவிக்கையை சொத்துடமையாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் இரு தினசரிகளில் அதாவது ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி வருமாறு செய்வார்.

இதன் நோக்கம், அடமான சொத்தானது வங்கியில் அடமானத்தில் உள்ளது எனவும்,  அதன் நிலுவைத் தொகை இவ்வளவு எனவும்,  அவ்வடமான சொத்தின் மீது பொது மக்கள் எவ்வித உடன்படிக்கையோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ள கூடாது எனவும் அவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வங்கியை கட்டுப்படுத்தாது எனவும், வேறு ஏதேனும் கடனுக்கு இணைப்பாணை வாங்கினால் அது மேற்படி வங்கியின் கடனுக்கு பிறகே செல்லுபடியாகும் என பொது மக்களுக்கு அறிவிப்பதாகும்.


தினசரியில் வெளியாகும் அறிவிக்கை ஒன்று அம் மாநில மொழியில் இருக்க வேண்டும்.   ஆங்கில தினசரியில் வருவது ஆங்கில மொழியில் இருக்க வேண்டும்.   மாநில மொழி தினசரியில் ஆங்கிலத்தில் வெளியிட கூடாது.   அம்மாநில மொழியில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்க வேண்டும்.  இல்லையெனில் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம்.  இதற்காகும் செலவு கடன்தாரர் தலையில்.   ரூ.15000 முதல் ரூ,25000 வரை ஆகலாம்.  இது வங்கி தேர்ந்தெடுக்கும் தினசரியை பொறுத்து அமையும்.  பொதுவாக இவ் விளம்பரங்களை தமிழ்நாட்டை  பொறுத்தவரை The New Indian Express மற்றும் தினமணி தினசரியில் காணலாம்.

இந்த சொத்துடமையாக்கல் வேலை முடிந்தவுடன் வங்கி 30 நாட்கள் காத்திருக்கும்.   அதாவது சொத்தை விற்பனை செய்வது தொடர்பான அறிவிக்கையை வெளியிட

சரி, இந்த 30 நாட்களில் வங்கி அமைதியாக இருக்குமா என்றால் இல்லை.  என்ன செய்வார்கள்.  கடன் வாங்கிய நீங்கள் ஏதாவது பணம் கட்ட நடவடிக்கை எடுக்கிறீர்களா என கவனிப்பார்கள்.  பிறகு அடமான சொத்தை விலை மதிப்பீட்டாளாரை கொண்டு விலை நிர்ணயம் செய்ய கோருவர்.    Valuer சொத்தை பார்வையிட்டு வங்கி விலை மதிப்பீட்டை அளிப்பார். மதிப்பீட்டாளர் மூன்று விதமான விலைகளை அளிப்பார்.  வங்கி குழு (committee) அதை பரிசீலித்து  விற்பனைத் தொகையை (Reserve Price) நிர்ணயம் செய்யும்

வங்கி கடன்தாரர் மற்றும் ஜாமீன்தார்ருக்கு அடமான சொத்தை விற்க இருப்பதாகவும் எனவே கடன்தார்ரோ அல்லது ஜாமீன்தார்ரோ அடுத்த 30 நாட்களுக்கு கடன் தொகையை செலுத்தி சொத்தை மீட்டுக் கொள்ள வேண்டுமென்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் சொத்தை வங்கி பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய நேரிடும் என்ற விற்பனை அறிவிக்கையை அனுப்பி வைக்கும்.

வங்கி அடுத்து என்ன செய்யும் – விற்பனை
அதற்கு முன் PHYSICAL POSSESSION என்றால் என்ன
 மதிப்பீட்டாளரின் மூன்று விதமான  விலை ( VALUATION)  
என்றால் என்ன
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்


இதையும் படிக்கவும் அத்தியாயம் 4
                                              அத்தியாயம் 3
                                              அத்தியாயம் 2
                                              அத்தியாயம் 1

               

கருத்துகள் இல்லை:

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...