செவ்வாய், நவம்பர் 13

மாலை எனை வாட்டுது



பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

                                                                                                   குறள்  1230

சென்றனன்
செல்வம்  தேடி
செல்லாதிருந்தது உயிர்

ஆயினும் அந்திமாலை
அவனை நினைவூட்டி
அடியவளைக் கொல்லுது

3 கருத்துகள்:

kowsy சொன்னது…

உங்கள் பதிவு சிறு துளி பேரு வெள்ளம்

பெயரில்லா சொன்னது…

அந்தி மாலை இங்கு கொலைகாரனாகிறான்.
வேதா. இலங்காதிலகம்.

srinivasan சொன்னது…

படமும் கவிதையும் நன்று !

மெய்யும் அறிவும்

  உடலது அறிவை உள்ளபடி ஏற்காது உடன்படுவ தில்லையென உறுதியான முடிவுகள் தடாபொடா சட்டங்கள் தடாலென மாறிடும் அடடா அற்புதமென அனுமதி அளித்திடும் தேகத...