சனி, ஏப்ரல் 25

கண்களின் விதி

 














நியூட்டனின்
3வது விதிப்படி
எனை ஈர்க்கும்
எதிர்வினையே

திக்குத் தெரியாத
பரந்த வெளியில்
திசைதனை காட்டுவது
கன்னி உன் கண்களே

காந்த ஊசிபோல்
கன்னி இருக்கும் திசையை
புலனறியும் வித்தை
பூவுலகின் விந்தையே

கன்னியின் கண்களின்
மின்னோட்டக் காந்தப் புயல்
அன்பின் அலைவரிசையில்
அதிர்வெண்களைப் பரப்ப

தாலமி, கோபர்னிகசின்
கோட்பாடுகள் மாறலாம்
எனைச் சுற்றும் பூமியாய்,
உனைச் சுற்றும் சூரியனாய்

அட்சரேகை, தீர்க்கரேகை
சந்திக்கும் புள்ளியில்
சங்கமிக்க
புதுமைகள் படைப்போமடி

ஒளிச்சேர்க்கை விதியின்படி
உனைப் பார்த்தே
என் சுவாசங்கள்
நீடித்திருக்கின்றன

உயிரியல் தத்துவம்,
வேதியியல், இயற்பியலில்
இருந்துவிட்டு போகட்டும்—
இலக்கியமாய் இக் கவிதை


உனக்காக
அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...