பற்பல
நம்பிக்கைகள்
பலகாலம்
தொடர்ந்திருக்க,
பட்டென
மீறுவதால்
பலர்
மனது நோகுது.
தொழுவது
தொன்மை,
தொடுடையோன்
ஆயினும்,
தொடர்பு
இல்லை எனில்
தொழுவத்தில்
அனுமதி இல்லை.
நம்பிக்கையற்றவர்களுக்கு
ஆலய
நுழைவு
அடிப்படை
உரிமையா?
தனிப்பட்ட
உரிமையா?
வறண்ட
பாலைவனத்தின்
வற்றாத
நம்பிக்கை
ஓரான்
காடுகளில்
ஒளிந்திருக்கிறதா?
கங்கையும்
யமுனையும்
புறப்படும்
இடத்தில்
புனிதம்
புகுத்தப்பட்டதால்
இயற்கை
தெய்வமானதோ?
முப்பது
கோடி முகமுடையாள்,
உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்
—
பாரதியின்
பொழிப்புரை
மத
நம்பிக்கைகளுக்கல்ல.
அரசியலமைப்பின்
அடிப்படை
உரிமை
25 மற்றும்
26-ல்
வரையறுத்தாலும்,
வழக்கங்கள்
மட்டுமே ஏற்கப்படும்.
ஒழுங்குபடுத்தும்
அதிகாரம்
அரசுக்கு
உள்ளதென்றால்,
பெரும்பான்மை
மதத்திற்கா
சிறுபான்மை
சுதந்திரத்திற்கா?
ஆன்மீகத்தில்
அரசின்
ஆராய்ச்சி
கூடாதென்றாலும்,
அதன்
இயக்கத்தின்
அளவை
கட்டுப்படுத்துவது.
அவசியமான
நடைமுறையில்
பாதுகாப்பு
நோக்கமென்றாலும்,
அவர்களுக்கேற்ப
அடிக்கடி
மாற்றப்படும்.
பொறுப்பும்
கட்டுப்பாடும்
பொதுவில்
என்றாலும்,
பெரும்பான்மை
மீறுவது
பெருமை
என்றானது.
நம்பிக்கையற்றவர்கள்
நன்னெறி
வகுக்க
தகுதியற்றவர்கள்
என
நம்பிக்கையாளர்கள்
வாதிட.
பெரும்பான்மை
தகுதி
இவர்களை
தவிர்த்து,
எவரோ
அவரே என
அதிகாரம்
எழுதி வைத்தது.
இறை
மறுப்பாளனும்
இந்து
என்றானதால்,
பகுத்தறிவில்
- பக்தமான்கள்
நீதி
கோருகிறார்கள்.
அரசியலமைப்பில்
“அனைவரும்”
என்பதும்
அந்தக்
கூட்டம் மட்டுமே —
அனைத்து
கூட்டமுமல்ல.
சமம்
என்றாலும்
சமமில்லை;
வலிமையுள்ளவனே
வகுக்கிறான்
நீதி.
பொருத்திருப்போம்
—
பொருள்
பொதிந்த நீதி,
மானுட
தர்மமா
மத
தர்மமா என்றே.
வாதம் தொடரும்
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக