வெள்ளி, மே 8

என்னுலக நாயகன்

 

 










பனையளவு உயரமும்,
பார்த்தாலே பரவசமும்,
பகட்டுச் சொற்களும்
பாவையெனை கவராது.

பிரமிக்க வைக்கும்
பரிசுப் பொருளோ,
விலையுயர்ந்த அணிகலனோ
விளைவுகளை ஏற்படுத்தாது.

கடினமானச் சூழலில்
கைகோர்த்து நிற்பவனும்,
சங்கடங்கள் நேர்ந்தாலும்
சந்தித்துப் பேசுபவனும்,

தன்னுறவு இவளென்று
தன் சுகதுக்கங்களை
துறந்தெனை நேசிக்கும்
தக்கதொரு இணையாய்,

என்னை விரும்புவனும்,
என்னவன் இவனென
எண்ணத்தை விதைத்து
என்நம்பிக்கையை கூட்டுபவனும்

கதைக்கின்ற பொழுது
கடமைக்குத் தலையாட்டாது
கவனமாய் கேட்டு
கனிவுடன் நடப்பவனும்

உணர்வுகளைக் கடக்காமல்
உடனிருந்து மதித்து,
நிலைத்த அன்புடன்
நித்தமும் நேசிப்பவனை

எழுச்சி முரசறிவித்து
என்னுலக நாயகன்,
என்சுவாச காவலனென
எத்திக்கும் சொல்வேனே

. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

என்னுலக நாயகன்

    பனையளவு உயரமும், பார்த்தாலே பரவசமும், பகட்டுச் சொற்களும் பாவையெனை கவராது. பிரமிக்க வைக்கும் பரிசுப் பொருளோ, விலையுயர்ந்த அணிகலனோ விளைவு...