ஞாயிறு, மார்ச் 1

நிபந்தனையற்றதா காதல்














எந்த சூழ்நிலையிலும்
என்னிணை நீயென்று
என்றென்றும் சொல்வேனடி

உனக்காக
உன்னுடனேயே
ஒவ்வொரு பொழுதும் கழியுமடி

ஆயினும்
ஆயிரம் அவஸ்தைகள்
அத்தனையும் சந்திக்க

அடியே
அன்பன் துணையுண்டு
சோதனைகளை சோதிக்க

வா, இறுகப் பற்று
இருவரும் இணைந்து
எதையும் எதிர்கொள்வோம்

கோப தாபத்தில்
கொதித்தெழுந்தாலும்
குறைகளைச் சுட்டு

விட்டு விலகாது
விதியென நோகாது
வேறெங்கு செல்வேனடி

பூரணத்துவம் கொண்டவர்
பூவுலகில் யாருமில்லை
புன்னகையோடிரு

கடினமாக காலங்களில்
கரைந்து குழம்பாதே
பொறுமையோடிரு

காதல்
காலகாலமானது
கண் கலங்காதிரு

மகிழ்வானத் தருணங்களில்
மனமொத்து இருப்பது
இயல்பென்றாலும்

நீயிருக்கும் வரை
நிலைத்திருக்கும் எனதன்பு
நிபந்தனைகளுக்கு உட்டபட்டதல்ல

அன்பன்
அ. வேல்முருகன்

நிபந்தனையற்றதா காதல்

எந்த சூழ்நிலையிலும் என்னிணை நீயென்று என்றென்றும் சொல்வேனடி உனக்காக உன்னுடனேயே ஒவ்வொரு பொழுதும் கழியுமடி ஆயினும் ஆயிரம் அவஸ்தைகள் அத்தனையும்...