அழகன் முருகனுக்கு
ஆதரவு அளிக்கவில்லையென
அரோகரா என்று
அடியேனுக்கு ஓலமிட்டனர்
ஞானசம்பந்தனின்
பல்லக்குத் தூக்கிகள்
வழிக் களைப்புத் தீர
ஏலோ லோ பாடிச் செல்ல
அர ஹரோ ஹரா - அதாவது
நற்கதியை அருள் எனும்
நற்சொல்லை
கற்றுக் கொடுத்தாராம்
தமிழர்கள்
ஜெயராஜ் பென்னிக்ஸை
வல்வேல் காத்ததா
வாழ்வை முடித்ததா
இந்து அல்ல என்பதால்
பாராது இருந்தானா
அவர்கள் தமிழர்கள் என
ஆரிடம் சான்று பெற வேண்டும்
இந்து சனநாயம்
எதிர் கருத்தில்லாதது
எதிர்பது என்பது
இல்லாமல் செய்வதாம்
இந்து எதிர்வாதங்கள்
முஸ்லிம்/கிருத்துவ மதத்தை தாக்கி
சொர்க்கம் காண்பது
இவர்களின் சனநாயகம்
அடுத்தவன் மதத்தை தாக்க
அருகதை எனக்கில்லை என்றால்
அந்த உரிமையை – உனக்கு வழங்கியது
எந்த ஊர் சட்டம்
சைவ முருகன்
சுப்ரமண்யன் ஆக்கப்பட்டதாகச்
சுகிசிவம் சொல்ல
சங்கடம் இந்துக்களுக்கா?
வணங்குபவனுக்கு – அதுவொரு
வடிகால்
மகுடிக்குக் கட்டுப்பட்டு
நம்பிக்கை என்கிறார்கள்
கிடா வெட்டு தடைச் சட்டத்திற்கு
கிளர்ந்தெழுந்தவன்
அறுபடை வீட்டில்
சேவலைப் படையலிட முடியுமா
தமிழ் கடவுள்தானே
தேவாராம் தமிழ்தானே
சிற்றம்பல மேடையில்
பாடிக் காட்டேன் தமிழை
நீச மொழி என்று
நாளாது வரை - தமிழைக்
கோயில் நுழையாதுக் காப்பவன்
தமிழ் என்றவுடன் தடுமாறிவிட்டாயோ
கொற்றவை மகனை
வள்ளி மணாளனை – சேயோனை
குலம் காத்தக்
குறிஞ்சித் தலைவனை
சுப்ரமண்யன் ஆக்கியே
சரவண பொய்கையென
சரடு விடுபவனின்
கார்த்திகேயன் கதை வேறு
வேல் என்பது
வேட்டைக்கான ஆயுதம்
வேள்வி நடத்துபவர்கள்
வேட்டைக்குக் களம் தேடுகின்றனர்
ஓட்டுப் பொறுக்குவதற்கு
ஒவ்வொருவருக்கும் ஒரு உத்தி
ஒன்றாக இருந்தவனை
ஓட்டிற்காக இந்துவாக்கி விட்டான்
சூத்திரம் அறியா
சூத்திரன் சூடேறி விட்டான்
சேகருக்கு பால் “பாக்கெட்” கிடைக்கும்
உனக்கு ஒன்றும் கிடைக்காது
சனாதனத் தர்மத்தில்
சனநாயகம் கிடையாது
நம்பிக்கையில் நந்தனாயிருந்தால்
தீயில் எறிவாய்
எதிர்வினை என்று
சிலையாகி விட்டவனை
சிதைத்துப் பார்க்கிறாய்
விதைத்தவன் சிதைவதில்லை
கற்பனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, ஜூலை 19
புண்பட்ட மனமே
ஞாயிறு, ஏப்ரல் 19
காதல் குளம்
மூழ்கி மூச்சடக்கி
முத்தெடுக்க
ஏற்றதொரு குளமோ
பழகி பார்த்தே
பருவ பாடங்களை
படைத்திட உதவும் குளமோ
அழகி நீ அச்சாரமா
அத்தானை முத்தமிட
அருச்சுனையா பொங்கும் குளமோ
குழவி செய்ய
குலம் தழைக்க
குயவருக்கு ஏற்ற குளமோ
தேகமிருக்கும் வரை
மோகமுண்டு என
தாகந்தீரச் சொல்லும் குளமோ
வழிவழியாய்
வாழும் காதலை
வடிவமைத்த வண்ண குளமோ
மலரும் காதலெல்லாம்
மானுட இயற்கையடி - மானே
இப்பொய்கையும் அப்படிதானடி
செவ்வாய், ஆகஸ்ட் 28
மாலதியின் சிந்தனைகள்
[வேல்வெற்றியின்] மண்சோறுண்டால் குழந்தை ஐப் பற்றிய புதிய கருத்துரை.
6 messages
மாலதி <thmalathi@gmail.com>
|
Tue, Jul 31, 2012
at 3:25 PM
|
To: selvel.murugan@gmail.com
|
|
|
மிகசிறந்த அறிவியலை முட்டாள்தனமான
ஆன்மீகமாக்கி அவலப்
படுத்துகிறார்கள் ஆண்மைக்
குறைபாடு இருப்பவன்
தான் மனைவிக்கு
இன்னொரு திருமணம்
செய்து வைப்பானா? வினா
எழுகிறது விடைதான்
கிடைப்பதில்லை ? இந்த
போலி குமுகத்திலிருந்து மண் சோறு
உண்ணும் முறையில்
பெண்களின் கருப்பையின்
குற்றம் விலகுகிறது
பின்னர் குழந்தைப்
பேறு உண்டாகிறது
இந்த அறிவியல்
தெரியமையம் பக்தியாகி
விட்டது .
|
vel Murugan <selvel.murugan@gmail.com>
|
Wed, Aug 8, 2012
at 12:18 PM
|
To: மாலதி <thmalathi@gmail.com>
|
|
வணக்கம்,
தங்கள்
பதில் மண்சோறு
உண்டால் குழந்தை
பாக்கியம் கிட்டம்
என்ற தொனி
தெரிகிறது. மண்ணில்
சோறிட்டு உண்பது
அறிவியலா என தெரியவில்லை.
என்
கேள்வி தவறாக
இருந்தாலும் விளக்கமளிக்கவும்
நன்றி
வேல்முருகன்
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
Mala Thi <thmalathi@gmail.com>
|
Thu, Aug 16, 2012
at 2:51 PM
|
To: vel Murugan
<selvel.murugan@gmail.com>
|
|
வணக்கம் மண்சோறு உண்டால் குழந்தை கிடைக்குமா
இது அறிவியலா? என்ற
உங்களின் வினா
உண்மையில் பாராட்டக் கூடியதே
. மான் சோறு
என்பது தெருவில் கொட்டிக்
கிடக்கும் மண்ணிலும்
சகதியிலும் சோற்றைக் கொட்டி
உணவை உண்ணுவதில்லை
. தூய்மையாக்கப் பட்ட
கல்லில் அல்லது தரையில் சோற்றைக் கொட்டி அதை
கையை பின்புறமாக
கட்டிக் கொண்டு பெண்கள்
உணவு உன்ன
கருப்பையில் உள்ளகுற்டங்கள்
விலகி குழந்தைப்
பேறு உண்டாகிறது
. புரிதலுக்கு நன்றி
மாலதி .
[Quoted text hidden]
|
vel
Murugan <selvel.murugan@gmail.com>
|
Thu, Aug 16, 2012 at 3:28 PM
|
To:
Mala Thi <thmalathi@gmail.com>
|
|
வணக்கம்
தங்கள் கருத்தில்
எனக்கு உடன்பாடில்லை. எங்கள் தாத்தா
பாட்டிகள் மண்
கலயத்தில்தான் உணவு
உண்டனர். பனை மட்டையும், தேங்காய்
சிரட்டையும்தான்
கரண்டிகள், நான்தான் எவர்சில்வர்
தட்டில் சாப்பிடுகிறேன்.
நானும் தெருவில்
கொட்டிக் கிடக்கும்
மண் என்று
சொல்லவில்லை.
பிள்ளை பேறு
கிடைக்க, கருப்பை குற்றஙகள்
விலக தூய
தரையில் உணவுண்டால்
போதுமா
அப்படியென்றால் பெண்ணென்ன
அத்தனை ஆணும்
கூட தினமும்
மண்சோறுண்ண தயாராக
இருப்பான். ஆணுக்கும் அது
ஒரு கவலைதான்.
நீங்களே ஓரிடத்தில்
ஆணுக்கும் குறையிருக்க
வாய்ப்புண்டு என்று
சொல்லியுள்ளீர்கள். உண்மையேதான்.
அப்படியிருக்க மண்சோறு
மகத்துவம் அளிக்குமா?
குறைக்குத்தான் நிவர்த்தி
தேடவேண்டும்.
எனது நீண்ட
பதிலுக்கு காரணம், தங்களை
எழுத்து வீச்சு. அது
அவநம்பிக்கையை
தகர்க்க வேண்டும்
வளர்க்க கூடாது
என்ற எண்ணத்தில்
இது உளவியல்
சம்பந்தப்பட்டது என்பதால்
இது போன்ற
நம்பிக்கைகள் இருக்கதான்
செய்கிறது. ஆயினும் ,,,,
இயற்கையை மீறி
பார்ப்போம் இல்லையெனில்
அமைதியாக இருப்போம்
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
Mala Thi <thmalathi@gmail.com>
|
Fri, Aug 17, 2012
at 3:21 PM
|
To: vel Murugan
<selvel.murugan@gmail.com>
|
|
அண்ணன் சீமான் ஒரு
இடத்தில் சொல்லுவார்
நான் செத்துதான் என்
உண்மையை நிலைநிறுத்த வேண்டுமெனில் அது
என்னால் இயலாது என்பார்
. நான் சொல்லுவது
அறிவியல் அடிப்படையிலானது இது ஒக
இருக்கையில் ஒரு
பகுதிதான் வியக்கனம் தேவையில்லாத விமர்சனம்
தேவைதான் ஆனால் முரட்டுத்தனமான விமர்சனம் பொருளற்றது தன்னிலை
விளக்கம் உங்களுக்கு
மட்டுமே விளக்கமா
அளிக்கிறேன் . இது
அறிவியல் சித்த
மருத்துவ அறிவியல் ஒக இருக்கை(யோகாசனம் )அறிவியல்
வேண்டுமானால் நல்ல
யோகாசன ஆசானை சந்திக்கவும்
.
நன்றி
.
மாலதி
[Quoted text hidden]
|
vel Murugan <selvel.murugan@gmail.com>
|
Sat, Aug 18, 2012
at 11:37 AM
|
To: Mala Thi <thmalathi@gmail.com>
|
|
பொறுத்தமற்ற விளக்கம் . மண்சோறுக்கும் யோகசனத்திற்கும் தொடர்பில்லை,
முரட்டு
விவாதத்தை மேற்கொண்டு
தொடரவில்லை,
நன்றி
[Quoted text hidden]
--
*Velmurugan A*
|
மேற்கண்ட விவாதத்திற்கு பதில்தான் பதிவர் எழுதிய பாராட்டு பத்திரம் இங்கே http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html
அறிவியலை
ஆன்மீகமென எண்ணி
கோட்டை விட்டு விடுவோம்
ஆன்மீகமென எண்ணி
கோட்டை விட்டு விடுவோம்
மண்சோறு உண்ணாமல் கோட்டை விட்டு
மகவு வேண்டி மருத்துவமனையில் (fertility clinic) காத்திருக்கின்றனர் மக்கள் கூட்டம் என்கிறார்
சான்றைத் தேடி
அறிவியலை பரப்புரை
செய் .
அறிவியலை பரப்புரை
செய் .
மண்சோறு உண்டு மகவு பெற்றவர் பட்டியல் அடுத்த பதிவாக வெளிவரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் காட்டுமிராண்டி
பெரியார் ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு படுத்தியதும்
முடமாக்கியதும்
போதுமே
தமிழனை
இழிவு படுத்தியதும்
முடமாக்கியதும்
பெரியார் ஒரு மிகச் சிறந்த சீர்திருத்தவாதி, அவர் இல்லையென்றால் தமிழகம் இன்னும் பின்தங்கிய நிலையில் இருந்திருக்கும். அவர் எந்த தமிழனை இழிவு படுத்தினார்.......... பட்டியல் வாசிப்பது யாரென்று பாருங்கள் மக்களே......
தமிழன் முடமானானாம், எழுந்து நின்று இவர்கள் சரி செய்தவற்றை பட்டியலிடட்டும்.
பெண் கல்வி, பெண் விடுதலை, விதவை மறுமணம் கோயில் நுழைவு போராட்டம், சமூக விடுதலை, மனிதனை மனிதனாக மதித்தல் இவையெல்லாம் பெரியாரின் பங்கு இல்லை என சொல்லட்டும்
சிந்திப்பாய்
தமிழனே .
தமிழனே .
பெரியார் சொல்வார், இந்த இராமசாமி சொல்கிறான் என்று யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சிந்தியுங்கள் சரியில்லையென்றால் எனென்று கேள்வி கேளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்பார்.
கேள்வி கேட்டால் நாம் காட்டுமிராண்டி
நல்லது
திரும்பவும் இதை படியுங்கள் http://velvetri.blogspot.in/2012/07/blog-post.html
புதன், ஜூன் 1
முகத்தில் தெரியும் பீதி
ராம் சொன்னதாக ஜெ தன் தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். யார் படிப்பார்கள். படிப்பதற்கு வசதியில்லா புத்தகம். புத்தகத்தில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. அதற்குள் வெளித் தோன்றத்தை வைத்து கதைகள் தயார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
H₂O என்றால்...?
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
ஆவணங்களின் அடிப்படையில் எழுதப் பட்டதாக இதன் ஆசிரியர்கள் சொல்கின்றனர். இதில் சொல்லப்படுகிற நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள...
-
ஆரணியில் ஆரம்பித்தது அரகரனின் அச்சு முறி விளையாட்டு ஆட்டத்தில் அரங்கனும் அங்கம் வகிக்க அடுத்து சூடு பிடித்தது அரகரனும் அரங்...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
நாட்டில் எல்லா முதலாளிகளும் சொந்த காசில் நிறுவனம் ஆரம்பித்து நட்டப்பட்டு தலையில் துண்டு போட்டு கொண்டனர் என நம்பும் மக்களுக்காக மேலே உள்ள ப...
-
அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்பட...

