ஞாயிறு, ஏப்ரல் 19

காதல் குளம்



மூழ்கி மூச்சடக்கி
முத்தெடுக்க
ஏற்றதொரு குளமோ

பழகி பார்த்தே
பருவ பாடங்களை
படைத்திட உதவும் குளமோ

அழகி நீ அச்சாரமா
அத்தானை முத்தமிட
அருச்சுனையா பொங்கும் குளமோ

குழவி செய்ய
குலம் தழைக்க
குயவருக்கு ஏற்ற குளமோ

தேகமிருக்கும் வரை
மோகமுண்டு என
தாகந்தீரச் சொல்லும் குளமோ

வழிவழியாய்
வாழும் காதலை
வடிவமைத்த வண்ண குளமோ

மலரும் காதலெல்லாம்
மானுட இயற்கையடி - மானே
இப்பொய்கையும்  அப்படிதானடி

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...