திங்கள், மே 23

கண்ணாளா

கோடைக் காலம்
குளு குளு
குலு மணாலி
செல்லலாமா

கிர்ணி, தர்பூசணி
இவற்றோடு
இளநீர்
பருகலாமா

தகதகக்கும் வெயிலில்
தகிக்கும் தேகம்
சுகிக்க வழி
சொல்லாயோ

குளிர்ந்த மோரோ
குடிக்க தண்ணீரோ
குளிர்சாதன கடைக்கு
கூட்டிச் செல்வாயோ

கோடையில் குதுகலிக்க
காதல் கண்ணாளா
கன்னியின்
கனவுகள் இவை

எண்ணங்களை
ஏட்டில் ஏழுதவில்லை
என் கண்ணில்
எழுதி வைத்தேன்

கண்டாயோ என்னவோ
கட்டிபிடி என்றாய்
கட்டுப் பட்டேன்
களிப்புற்றேன்

குற்றால அருவியோ
குளிர்ந்த காஷ்மீரோ
சிலிர்த்து உறைந்தேன்
சில்லென்ற நின்தேகத்தாலே

2 கருத்துகள்:

Chitra சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள்! :-)

அ. வேல்முருகன் சொன்னது…

நன்றி

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...