செவ்வாய், ஜூன் 21

இரயில் பயணங்களில்

கடந்த 24 நான்கு ஆண்டுகளில் இரயில் பேரூந்து என விதவிதமான பயணங்கள், நேற்றும் ஒரு இரயில் பயணம் அதன் அனுபவம்.............

திருப்பதி நோக்கி செல்லும் இரயில், பிராமண புரோகிதர், 50 வயதை கடந்திருப்பார், இரயில் திருத்தணியில் ஒரு பெண் தன் இரு குழந்தைகளோடு வருகிறார்.  அவரின் அருகே இடமிருந்ததால் அமருகிறார். சிறிது நேர பேச்சில் அப்பெண்ணின் 5 வயது குழந்தைக்கு பசிக்கிறதா என கேட்டு இரயிலில் வந்த நாவல் பழத்தை வாங்கி கொடுக்க முயல்கிறார்.  அக்குழந்தை வேண்டாம் என்கிறது

ஆனாலும் வாங்கி விடுகிறார். பழத்தை விற்றதும் ஒரு 12 வயதுள்ள பெண்தான்.  அவளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அவர் கொடுத்த விதம்.......  அப்பெண் சாதரணமாக கை நீட்டுகிறார்.   இவரோ கையை தூக்கி போடுகிறார்.

பழத்தை குழந்தை வாங்க வில்லை ஆக குழந்தையின் தாயிடம் திணிக்கிறார்.  இது சாதாரண செய்கை. இடையில் அவர் பேரன் பேத்தி கண்டவராம் அதனால்  பழத்தை வாங்கி கொள் என்று பேச்சு

ரேணிகுண்டா வந்தது.  தினத்தந்தி விற்றுக் கொண்டு வந்தான் ஒருவன்.  அவன் ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தான் அதை அவர் வாங்க வில்லை மொத்தமாக இருந்த ஒரு பேப்பரிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டார்.  காசு கொடுப்பதற்கு முன் போல் முயற்சி செய்தார்.   பேப்பர் விற்றவன் சன்னல் மீது வைக்க சொல்லி சைகை செய்தான்.  பிறகு அங்கிருந்து எடுத்துக் கொண்டான்.

மீண்டும் பயணம் தொடர, குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தார். இட்லி விற்றவனை நிற்க வைத்து பசிக்கிறதா என்றார்,  ஐஸ் கிரிம் விற்றவன், வடை விற்றவன், பிஸ்கட் விற்றவன் எல்லோரையும் நிற்க வைத்து பார்த்தார்.  அந்த குழந்தை எதையும் வாங்கவில்லை பேசவும் இல்லை அந்த மனிதனிடம்.


1 கருத்து:

Senthil சொன்னது…

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
குழந்தைக்கு தெரிந்திருக்கிறது அந்த பிராமணரின் அவச்செயல்.

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...