மதம் என்பது மார்கமா
மானுடத்தின் பிரிவினை தர்கமா
நிதம் நிதமொரு மார்கமா
நீயும் நானும் வேறானமோ
வதம் புரிந்த அவதாரங்கள்
வரம் அளித்ததோ வாழ்வழிக்க
பதம் பார்க்கும் கடவுளை
பாரினில் இல்லாது ஆக்கிடுவோம்
பெரியாரின் சீர்திருத்தம்
பேதை மக்களை மாற்றலியே
உரியோருக்கு மனமிருந்தும்
உலகை மாற்ற எண்ணமில்லையே
உணர்வோடு விளையாடும்
உதவாத மதங்களை ஒழிக்கலையே
தளர்வோடு நாமிருந்தால்
தரணி சிறக்க வழியில்லையே
மானுடம் என்பதால்
மனமைதிக்கு மதங்கள் வேண்டுமா
காணும் சரித்திரத்தில்
கண்ட புதைகுழிகள் போதாதா
சமணம் அழிந்து
சைவம் தழைத்தது அறியாததா
அம்மணம் ஆயினும்
அதுவொரு மாதமாக வளரனுமா
அன்பு அமைதியென
அகிலத்திற்கு போதை தரும்
பின்பு சிறுபான்மை
பெரும்பான்மை எனபேதம் வளர்க்கும்
உயர்வு தாழ்வெல்லாம்
உன்விதி என்றே வகுக்கும்
அயர்வின்றி உழைப்போம்
ஆண்டவனை அறவே ஓழிப்போம்
ஊனம் உள்ளத்திலிருக்க
உதவுமோ உபநிடத கதைகள்
நானும் மறந்திட்டேன்
நான்கு பிரிவினைகள் அதில்தானே
பேணும் மனுநீதி
பெரியார் இங்கு சங்கராச்சாரி
நாணம் எவர்குமில்லை
நானும் மனிதனென உரிமைகோரி
வெள்ளி, மார்ச் 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இன்று போய் நாளை வா
பொருளாதார தடைகளினால் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் போரில் பொருத முடியாதென்றா எப்ஸ்டின் கோப்புகளுக்காக இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு என்னைத்...
-
நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீத...
-
ஓட்டு யாருக்கு மில்லையென ஒவ்வொருவரும் சொன்னால் ஒரு மாற்றம் வருமா! உலகம் விழிப்புறுமா? ஓட்டுரிமை உனது ஜனநாயக கடமையெனில் ...
-
கள்ளுண்ணும் கண்ணாலே கட்டுறுதிக் காளையை துள்ளிட வைத்தவளே தூக்கம் கெடுத்தவளே வெள்ளி முளைக்கயில் வேட்கையைச் சொன்னேனே அள்ளியள்ளிக் கொடுத்தால் ...
-
தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...
-
எந்த சூழ்நிலையிலும் என்னிணை நீயென்று என்றென்றும் சொல்வேனடி உனக்காக உன்னுடனேயே ஒவ்வொரு பொழுதும் கழியுமடி ஆயினும் ஆயிரம் அவஸ்தைகள் அத்தனையும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக