மதம் என்பது மார்கமா
மானுடத்தின் பிரிவினை தர்கமா
நிதம் நிதமொரு மார்கமா
நீயும் நானும் வேறானமோ
வதம் புரிந்த அவதாரங்கள்
வரம் அளித்ததோ வாழ்வழிக்க
பதம் பார்க்கும் கடவுளை
பாரினில் இல்லாது ஆக்கிடுவோம்
பெரியாரின் சீர்திருத்தம்
பேதை மக்களை மாற்றலியே
உரியோருக்கு மனமிருந்தும்
உலகை மாற்ற எண்ணமில்லையே
உணர்வோடு விளையாடும்
உதவாத மதங்களை ஒழிக்கலையே
தளர்வோடு நாமிருந்தால்
தரணி சிறக்க வழியில்லையே
மானுடம் என்பதால்
மனமைதிக்கு மதங்கள் வேண்டுமா
காணும் சரித்திரத்தில்
கண்ட புதைகுழிகள் போதாதா
சமணம் அழிந்து
சைவம் தழைத்தது அறியாததா
அம்மணம் ஆயினும்
அதுவொரு மாதமாக வளரனுமா
அன்பு அமைதியென
அகிலத்திற்கு போதை தரும்
பின்பு சிறுபான்மை
பெரும்பான்மை எனபேதம் வளர்க்கும்
உயர்வு தாழ்வெல்லாம்
உன்விதி என்றே வகுக்கும்
அயர்வின்றி உழைப்போம்
ஆண்டவனை அறவே ஓழிப்போம்
ஊனம் உள்ளத்திலிருக்க
உதவுமோ உபநிடத கதைகள்
நானும் மறந்திட்டேன்
நான்கு பிரிவினைகள் அதில்தானே
பேணும் மனுநீதி
பெரியார் இங்கு சங்கராச்சாரி
நாணம் எவர்குமில்லை
நானும் மனிதனென உரிமைகோரி
வெள்ளி, மார்ச் 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தேர்தல் 2024
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...
-
பாரதமாம் பஞ்சப் பாண்டவர்களாம் பக்தி இலக்கியமாம் பாராய்!! கதை கேளாய்!! மானிரண்டு மையலிலே மன்னன் பாண்டுவோ காட்டில் வேட்டையிலே கொன்றனன் ஆண்...
-
கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...
-
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக