குலமென்ன, கோத்திரமென்ன
கூடிக் களிக்கையில்
நினைக்கவில்லை
வலமென்ன இடமென்ன
வாதம் செய்கையில்
மதிக்க வில்லை
ஆணென்ன பெண்னென்ன
எல்லாம் மனிதம்தான்
என்றிருக்கையில்
காதலென்றேன்
கைபிடிக்க வேண்டுமென்றேன்
மோதலாகி போச்சு
மதிப்பென்ன மரியாதையென்ன
மாறி மனமுடிப்பின்
மானம்தான் போகுமென்றார்
ஊர் அழைத்து
உற்சவம் நடத்தி
உறவு கொள்ள வேண்டுமாம்
நடத்துங்கள் என்றேன்
நடவதாம் - நான்
மணமகனாயின்
இணையாக சுற்றியத்தை
இகலோகமெல்லாம் பார்த்தபின்
இவர்கள் பார்த்ததால்
பரலோகம் அனுப்ப
பாடை தயார் செய்வதாய்
பரப்புகின்றனர் செய்தியை
கிளை முறித்து
நீரூற்றுவோம்
கிள்ளையை மறவென்று தகவல்
என்னை முறித்து
எங்கு நட்டாலும்
எது வளரும் என்றேன்
முறிந்தபின் உயிரேது
நட்டபின் நட்டமேது
அறிந்துகொள் என்றனர்
அறியாது தவிக்கிறேன்
அவள் நிலை - எனினும்
முறியாது என்றே நினைக்கிறேன்
கூடிவாழ
அன்பு வேண்டும்
கூட வேறேது வேண்டும்
வள்ளுவனும்
அந்தவழி வந்தவனும்
என்றும் உரைப்பது
ஆயினும்
அவரவர் வேண்டுவது
அஃதல்லவே
காதலின் வெற்றி
காதலித்தவளை கைப்பிடிப்பதல்ல
காலமெல்லாம் அவளோடு வாழ்வது
ஆதலின் மனமே
அவளையே நாடு
அந்த செய்தியை அவளிடம் கூறு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
H₂O என்றால்...?
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம், அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும்...
-
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
புராணமோ புனைந்தக் கதையோ பொய்களின் மூட்டையோ பொறுமையாய் கேளுங்கள் வராக அவதாரத்தில் பூமாத் தேவியை தொட்டதால் பவுமன் பிறக்கிறான் அரக்கர்களை வென்ற...
-
கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள் காணவில்லை. ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டி...
-
கல்பனாக் கதையென்று காமகோடிக் கதைகட்டியப் பிறகு கடைகோடிச் சூத்திரன் நான் கதைச் சொன்னாக் கேட்பேளா கோபாலக் கிருஷ்ண பாரதியின் கோணல் வரிகளால் திர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக