செவ்வாய், மார்ச் 23

யமுனை

ரவிசங்கர்,  வாழும் கலை சாமியார் யமுனை நதியை சுத்தம் செய்தார்.  என்ன சொல்ல வருகிறார், இருக்கிற ஆலை முதலாளிகள் எல்லோரும்  கழிவுகளை சுத்தம் செய்யாமல் ஆற்றில் விடுங்கள் என் தொண்டர்கள் மூலம் நான் சுத்தம் செய்கிறேன் என்கிறாரோ?

கங்கை யமுனை ஏதுவானாலும் அசுத்தம் செய்யாமல் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக எனது கவிதை கண்ணன் காப்பானோ? அசுத்தத்தால் ஏற்படும் தீமை பற்றி சொல்லியுள்ளேன்.

ரவிசங்கர் யமுனையை சுத்தம் செய்வதற்கு பதிலாக ஆலை முதலாளிகளிடம் போய் கழிவுகளை ஆற்றில் கலக்காதே என போராடலாம்.  செய்வாரா?


கருத்துகள் இல்லை:

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...