திங்கள், மார்ச் 8

காவேரி









பாடுபட்டு உழைக்க கையிருக்கு,
ஏர்பூட்டி உழ மாடிருக்கு,
நாடு விட்டு பாய நதியிருக்கு,
நடுவிலே தடுக்க கர்நாடகமிருக்கு.

தாறுமாறாக பல கட்சிருக்கு,
தண்ணியால் பிரிந்து கிடக்கு,
ஊருக்கே கஞ்சி ஊத்தும்
உழுத வயிறோ காய்ந்திருக்கு.

வயிறு காய்ந்து,
வயல் எலி உண்ட போதும்,
பயிர் கருகி
பாசன நீரற்ற போதும்,

விளைந்த நெல்லோடு
வீதியில் நின்ற போதும்,
கலைந்தன கனவுகள்—
காப்பது அரசு அல்ல என்று.

கருத்துகள் இல்லை:

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...