திங்கள், மார்ச் 8

காவேரி









பாடுபட்டு உழைக்க கையிருக்கு,
ஏர்பூட்டி உழ மாடிருக்கு,
நாடு விட்டு பாய நதியிருக்கு,
நடுவிலே தடுக்க கர்நாடகமிருக்கு.

தாறுமாறாக பல கட்சிருக்கு,
தண்ணியால் பிரிந்து கிடக்கு,
ஊருக்கே கஞ்சி ஊத்தும்
உழுத வயிறோ காய்ந்திருக்கு.

வயிறு காய்ந்து,
வயல் எலி உண்ட போதும்,
பயிர் கருகி
பாசன நீரற்ற போதும்,

விளைந்த நெல்லோடு
வீதியில் நின்ற போதும்,
கலைந்தன கனவுகள்—
காப்பது அரசு அல்ல என்று.

கருத்துகள் இல்லை:

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...