திங்கள், மார்ச் 8

காவேரி

பாடுபட் டுழைக்க கையிருக்கு
   ஏறுபூட் டியுழ மாடிருக்கு
நாடுவிட் டுபாய நதியிருக்கு
    நடுவிலே தடுக்க கருநாடகமிருக்கு
தாறுமா றாபல கட்சியிருக்கு
    தண்ணியால பிரிஞ்சி கிடக்கு
ஊருக்கே கஞ்சி ஊத்தும்
    உழுத வயிறோ காய்ந்திருக்கு

வயிறு காய்ந்து
    வயலெலி உண்ட  போதும்
பயிறு கருகி
    பாசன நீரற்ற போதும்
விளைந்த நெல்லோடு
    வீதியில் நின்ற போதும்
கலைந்தன கனவுகள்
    காப்பது அரசல்ல என்று

கருத்துகள் இல்லை:

இன்று போய் நாளை வா

பொருளாதார தடைகளினால் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் போரில் பொருத முடியாதென்றா எப்ஸ்டின் கோப்புகளுக்காக இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு என்னைத்...