வெள்ளி, ஏப்ரல் 10

வைரஸ் - கொரோனா




காற்றிலே உயிரற்று - உன்னில்
கலந்தவுடன் உயிர்பெற்று
எண்ணிலடங்கா படியெடுத்து
யார் மூச்சையும் நிறுத்துவது

தெரிந்தல்ல - தெரியாமல்
அறிந்தல்ல - அறியாமல்
செய்த தவறேதான் - உன்னை
செயலிக்க செய்யும்

சகலமும் குற்றமல்ல
ரட்சிக்க கடவுளுமில்ல
குணமாக்க மருந்துமில்ல
மானுடமே அமைதியாயிரு

கொடிது கொடிது
வறுமை கொடிது
அஃதுபோல்
கொரோனா கொடிது

90000 பலிகளை கடந்தும்
தேவலாயமும் மசூதியும்
திருக்கோயிலும் 
ஏதும் அறியாதிருக்கின்றன

தேகம் காக்க
தெருவை தீண்டாது
குறுகிய காலம்
குடும்பத்தோடு குதுகலி

சுவாச பயிற்சியும்
சகவாசம் தவிர்த்தலும்
உணவே மருந்தென்றும்
உணர்ந்து கொள்

ஆக அறைக்குள் முடங்கு
ஆசையை துற
புத்தனாக மாறவல்ல
பூவுலகில் நடமாட

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...