சனி, ஏப்ரல் 4

வாலி


தம்பிக்கு நட்பாய்
தசரதப் புத்திரனாம்
தாரை உரைக்க...
தம்பியைக் கொல்லேன் - என்கிறான்

வாய்க்கால் தகராறு
வாலிக்கும் இராமனுக்கும்
வாழ்வில் ஏதடி
வேதங்கற்றவன் - யோக்கியனடி

எதிர்நின்று வீழ்த்தாது
புல்மறைத்தப் பாழ்கிணறுபோல்
பாணமெய்தினான் மறைந்திருந்து
மாண்டான் வாலி - வீரனவன்

அறத்தோடுப் போரிட்டவனை
திறத்தால் வெல்லாது
புறத்தால் கொன்றே
புகழ்மகுடம் கொண்டவனே

எதிர்த்து நீவந்திருந்தால்
எமலோகம் சென்றிருப்பாய்
மறைந்துக் கொன்றதனால்
மாறாபழிச் சுமக்கிறாய்

சுக்ரீவனின் தேவை
சீதையை மீட்கவென்றால்
பாதைக் காட்டி - உனது
மனையாளை மீட்டிருப்பேனே

இப்போதோ

விலங்கை கொல்ல
விதிகள் வேண்டாமென்கிறாய்
ஏலாமை மறைக்க
ஏதோதோ காரணம் தேடுகிறாய்







1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதற்கு ஏகப்பட்ட காரணம் சொல்வார்கள்...

ம்... கதைகளாகவே பார்ப்போம்...

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...