வெள்ளி, ஏப்ரல் 17

ஆனந்த் டெல்டும்டே



அதிகாரத்தின்
அடுத்த பலிகடா
அம்பேத்காரியவாதி
ஆனந்த் டெல்டும்டே

அரசு நிறுவனத்தின் - முன்னாள்
தலைமைச் செயல் அதிகாரி - மத்திய
மேலாண்மை கல்வி நிறுவனத்தின்
இந்நாள் பேராசிரியர்

அறிவு ஜீவி
ஆராய்சி கட்டுரைகள்
30 புத்தகங்கள்
அதனாலென்ன

சமூக செயற்பாட்டாளர்
யாருக்கு என்பதில்தான் பேதம்
ஏழைகளுக்கு என்பதனால் -அவர்
அரசுக்கு எதிரானவர்

எங்கும் ஆனந்த்
எதிலும் ஆனந்த்
என்றொரு புனைவு
ஏகமனதாக ஏற்க

பஞ்சன்யாவில் செய்தி
முதல் தகவல் அறிக்கையாக
இந்திய ஊடக நிறுவனங்களோ
மலடனாது

பீமா கோரேகான்
பிரிடிஷ் ஆதிக்கத்தின் போர்களம்
பார்வையிட்டார் அம்பேத்கார்
ஓரு நூற்றாண்டிற்கு முன்பு

பேஷ்வாக்களை வென்ற மகர்கள்
பொதுவாக கூடுவர் ஆங்கே - அது
200 ஆம் ஆண்டு கொண்டாட்டம்
பற்றியது மராத்தாக்களின் கோபம்

யாருமில்லாத வீட்டில்
யாருடுடைய அனுமதியின்றி
எதையோ கைப்பற்றியதாக செய்தி
ஆதாரங்கள் ரகசியமானது

சான்றுகள் - மூடி
முத்திரையிடப்பட்ட உறையிலே
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு - ம்
சாட்சியை கலைத்துவிடுவார்கள்

பேசுங்கள்
உங்கள் முறைக்காக
காத்திராது என்கிறார்
ஊமையானது சமூகம்

பெருங் கட்சிகள்
பேதலித்து கிடக்கின்றன
சொத்துக்களை காக்க
சோதனைகளை தவிர்திட

தேசத்தையும் மக்களையும்
நேசிப்பவன் தேசவிரோதியாய்
அடையாளப் படுத்தப் படுகிறான்
விதைகள் வேர்விட கூடாதென்பதற்காக

எதிர்குரல்கள்
ஒடுக்கப்படுகிறது
மனித உரிமைகள்
மறுக்கப் படுகிறது

இந்திய ஜனநாயம் என்பது
எதிர் கட்சிகள் வாய் மூடியிருக்க
நீதிமன்றங்கள் கண்காது மூடியிருக்க
ஆட்சியாளர்கள் ஆள்வதாகும்

தனி நபர்கள், கலைஞர்கள்
சிறு அமைப்புகள்
குரல் கொடுக்க
குரல்வளை  நெறிக்கப்படுகிறது

தேசிய பாதுகாப்பு சட்டம்
தேச பிதாவை கொன்றவர்கள்
எப்படி கையாள்வார் எனவறிவாய்
ஆயினும் குரல்கொடு தோழனே


குறிப்பு:  பாஞ்சன்யா  RSS பத்திரிக்கை



1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம்நாடு, எப்படிப்பட்ட தீவிரவாத இயக்கத்தில் சிக்கியுள்ளோம் என்பதை பலர் இன்னும் அறியவில்லை...

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...