வெள்ளி, ஏப்ரல் 10

திருமுகம் காண.......



உனதானா பெயரைக் கேட்டால்
    உயிர்துடிப்பு உயரஉயர எகிறுதடா
எனதானா நினைவு எங்கும்
   என்நெஞ்சம் ஏங்கேங்கி போகுதடா
திருமுகம் காணவே வேண்டுதலடா
  திருடா தினந்தினம் காட்டாயோ
வருமுகம் கன்னியான் அறிந்தாலோ
   வாடாதடா இந்த வாசமல்லி

தேக்கி வைச்ச ஆசையை
    திறந்துவிடு மேட்டுரூ அணைபோல
காக்க வச்சா தவிப்பேனே
    காய்ந்த  கடைமடை விவசாயியா
சொக்கி  நிற்கும் முல்லைதானே
    சூடிக் கொள்ள மயங்குதானே
முக்கி முத்தெடுக்கும் காலந்தானே
    மூன்றாம் சாமமும் நீளுந்தானே

தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?

  தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...