வியாழன், ஏப்ரல் 16

குத்தமில்ல?!!



குல தெய்வத்திற்கு
காப்பு கட்டிட
குத்தமென - கிராமத்து
எல்லை தாண்டுவதில்லை

எல்லை கடந்து
தொல்லை தரும்
கொரோனாவோ - உலகை
குற்றுயிர் ஆக்குதே

உயிரை காக்க
தேவையை சுருக்கு
ஊரைச் சுற்றாது
உடல்நலம் பேணு

மருந்து இல்லாததால்
மனதை கட்டுப்படுத்து
மனைக்குள் அடங்கு - அல்ல
மயானத்தில் முடுங்குவாய்

காற்று வாங்க போனால்
கொரோனா வாங்கி வருவாய்- அதை
கேட்டு வாங்கி போனால் - விடை
சொல்லிக் கொண்டு போவாய்

நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
இழப்புகள் கூடுவதால்
இங்குமங்கும் சுற்றாதே

வாழும் மக்களின்
வாழ்வாதாரம் - மேலும்
ஓரு வாரம்
தள்ளி போகலாம்

ஊரை காத்திட
முக கவசமும்
தலைகவசமும் போடு - அது
உனையும் காத்திடும்

பசி பட்டினிக்கு
பஞ்சை பராரியோடு
பாமரனுக்கும் உதவி செய்
உன்னையும் பாதுகாத்து


3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மருந்து இல்லாததால்
மனதை கட்டுப்படுத்து
மனைக்குள் அடங்கு - அல்ல
மயானத்தில் முடுங்குவாய்

உண்மை
உண்மை
நன்று சொன்னீர்

Kasthuri Rengan சொன்னது…

நச்
கருத்தான கவிதை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// பசி பட்டினிக்கு
பஞ்சை பராரியோடு
பாமரனுக்கும் உதவி செய்
உன்னையும் பாதுகாத்து //

மிகவும் சிறப்பு...

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...