சனி, மே 9

வேண்டும் தீ



ஒன்னா வளர்ந்த ஊரிலே
    ஓதிய வேதம் புரியல
சின்னாள் கழிந்த பின்னாலே
    சிவனும் நபியும் சேரல
இன்னல் மின்னலா தொடர
    இவர்கள் சிறுபான் மையினரோ
என்னால் இவைகளை மாற்ற
    ஏது செய்யலாம் என்போரே


ஒற்றுமை குலைக்கும் ஓநாய்களை
    ஓடோட விரட்டி ஒழிக்கனும்
வேற்றுமை நினையா தோழனாய்
     வீதியில் அன்பை விதைக்கனும்
முற்றுமை ஆனது புரட்சியென
   முடங்கிடாது  தீமூட்டி காத்திட்டு
கொற்றவனுக் குணர்த்திடு மானுடமே
   கொலைகள் இனியில்லை மதத்தாலென
 


 

கருத்துகள் இல்லை:

நோய்

  நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...