வெள்ளி, மே 8

கடைக்கண் பார்வை



 

கன்னியின் கடைக்கண் பார்வை
   கண்டவனுக்கு காதல் உண்மை
அன்ன ஆகாரமில்லா காளைக்கு
    அணங்கிடம் தோற்க வெறுமை
சன்னியாசி கோலம் பூண்டே
    சதிகாரி என்பதோ பொய்மை
உன்னாசை மாறிட்டாலும் - காதல்
    உலகம் இயங்குவதால் பருண்மை

மாளும் ஈரூடலால் மீளுமோ
    மறித்த தெய்வீக காதல்தான்
வீழும் உலகின் விதிவசமென
    வீணணாய் இருப்பது வாழ்வோ
செழுமை பெற்ற காதலாய்
   சேர்ந்து இணைந்து வாழ்ந்திட
நாளும் உழைப்போம் - நரம்பிசைக்க
    நாமும் காதல் புரிவோம்

கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...