திங்கள், மே 25

பிரணவம்



கண்ணில் வலைபோட்டு
   கவர்ந்த என்னிதயக் கள்வனே
பண்ணில் கட்டமைத்த
    பாசாங்குக் கலைகள் வேண்டாமே
எண்ணில் எழுத்தில்
    என்னுயிர் மெய்யா னவளே
பண்ணில் பாசமே
     பாசாங் கல்ல மயிலே

எழுத்தசைச் சீரோடு
    எதுகை மோனை பாடாதே
மழழை ஓசைக்கு
    மங்கல நாணே வழிதானே
எழுத்தில் ஒப்பந்தம்
     என்னிணை நீதான் என்றே
முழுஉலகம் அழைத்தே 
     மன்றல் நடத்தி காட்டவா

கழுத்தில் ஏறினால்
    கிழத்தி என்றே ஊரறியும்
நழுவும் கெழுத்தி
    நாவுனக்கு நானே அறிவேன்
பழகும் பளிங்கே
    பழிச்சொல் வீச வேண்டாமே 
வழக்கும் வாய்பேச்சும்
    வசந்தமல்ல - வாழ்வில் கூடுவோமே

தழைக்கும் வாழ்வை
    தரணிச் சிறக்க நடத்திடு
உழைக்க உன்னிணையாய்
    உள்ளேன் உயிருள்ள வரையே
பிழைத்துக் கொள்வேன்
    பிரணவம் கற்றேன் உன்னிடமே
அழைத்துக் கொண்டாய்
    ஆனந்தம் ஆனந்தம் வாழ்விடமே

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...