வியாழன், மே 28

இரண்டாவது தூண்





நீதி நியாயம்
நாட்டில் இருப்பதாய்
நம்பிக்கை

நம்பாதே என்று
நியாயவான்கள்
நிரூபித்தும் விட்டார்கள்

நான்கு தூண்கள்
ஓரணியில் 
நாமெல்லாம் உதிரிகளாய்

முதல் தூணுக்கு
முட்டுக் கொடுப்பதே- மற்ற
மூன்றின் வேலை

மூன்று நாட்கள் அவகாசமிருந்திருந்தால்
மூட்டை முடிச்சுகளை தூக்க
அரசியல் கூலிகள் தேவைபட்டிருக்காது

மூன்று மணி நேரத்தில்
முழு அடைப்பு – அது
அதிகாரத்தின் பல்லிளிப்பு

ஊரடங்கில்
ஊர் போகும் வழியென்று
ரயில் போகும் பாதையில்

வாராது என நினைத்து
வந்தக் களைப்பில்
தலை வைத்தான்

கல்லக்குடிக் கொண்டோனென
கௌரவப் பட்டத்திற்கா
தன்குடியோடு வாழ 

சாகதான் வேண்டுமென 
சட்டம் காப்பவன்
சதிராடினால்

இந்த தேசத்தை விட்டு
இந்த மயானத்தை விட்டு
எங்கு செல்ல

பாதம் புண்ணாகி
பசியால் நெருப்பாகி
பாதியிலே போனவளை

ஏழுப்ப சுவிசேஷர்களில்லை
போர்வையை ஏழுப்புகிறது
புரியாத பிள்ளை

சோற்றுக்கு முறையிட
முகாம் இருக்கிறதென
மூடிவிடுவது நீதி

கால்நடைகளாய் மனிதர்கள் 
நிர்கதியாய் விட்ட
ஜனநாயக நிதர்சனங்கள்


நீதி வேண்டுமானால்
கண் திறந்து தராசை பிடி
கையில் வாளோடு



மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...