சனி, மே 9

கடிதத்தில் என் நெஞ்சம்



வண்ணப் பூவாய்
   வாசலில் மலர்ந்த
அன்னப் பறவையே
   அன்புடன் எழுதுகிறேன்

எண்ணக் கனாவில்
   எனையே வாட்டும்
கண்ணே காதலில்
   காவியம் பாடுகிறேன்

தினமும் நினது
   திருப்பார்வை பட்டால்
வனங்கள் எல்லாம்
   வசந்தமாய் தெரியுதடி

சரணம் தேவி
   சம்மதம் அருள்வாய்
காரணம் தேடி
   காய்தல் செய்யாதடி

இகத்தில் உனையன்றி
    இங்குயாரை பூசித்தேன்
முகத்தை திருப்பினாய்
    முகவரிகள் மாறிவிட்டதே

ஏனடி கோபம்
   எதுவடி காரணம்
நானடி சோகத்தில்
   நலிகிறேன் மாதத்தில்

ஏதோ நடந்தவை
    எல்லாம் மறந்துவிடு
இதோ நெஞ்சம்
    இனியுனது தஞ்சம்

கருத்துகள் இல்லை:

வரட்சி

  மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...