வெள்ளி, மே 8

மருளும் மானுடம்



மதம் என்பது மார்க்கமா
   மானுடத்தின் பிரிவினை தர்க்கமா
நிதம் நிதமொரு மார்க்கமா
   நீயும் நானும் வேறானமோ
வதம் புரிந்த அவதாரங்கள்
   வரங்கள் அளித்ததோ வாழ்வழிக்க
பதம் பார்க்கும் கடவுளை
   பாரினில் இல்லாது ஆக்கிடுவோம்

பெரியாரின் சீர்த்திருத்தம்
   பேதை மக்களை மாற்றலியே
உரியோருக்கு மனமிருந்தும்
   உலகை மாற்ற எண்ணமில்லையே
உணர்வோடு விளையாடும்
   உதவாத மதங்களை ஒழிக்கலியே
தளர்வோடு நாமிருந்தால்
   தரணி சிறக்க வழியில்லையே

மானுடம் என்பதால்
   மனமைதிக்கு மதங்கள் வேண்டுமோ
காணும் சரித்திரத்தில்
   கண்ட புதைகுழிகள் போதாதோ
சமணம் அழிந்து
   சைவம் தழைத்தது அறியாததா
அம்மணம் ஆயினம்
   அதுவொரு மதமா  வளரனுமா

ஊனம் உள்ளத்திலிருக்க
   உதவுமோ உபநிடத கதைகள்
நானும் மறந்திட்டேன்
   நான்கு பிரிவினைகள் அதில்தானே
பேணும் மனுநீதி
   பெரியோன் இங்கு சங்கராச்சாரி
நாணம் எவருக்குமில்லை
    நானும் மனிதனென உரிமைகோரி

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...