சனி, மே 9

புரட்சி கவி



அடங்கி கிடக்க ஆக்களா
   ஆளும் உரிமை நமக்குண்டு
முடங்கி கிடக்கும் மக்களே
   மூடவழக்கம் அகற்று என்று
ஓடுங்கி கிடக்கும் ஓடப்பர்களை
   ஒப்பப்பர் ஆவாய் என்றுரைத்தே
தொடங்கி வைத்தான் போரை
   தோளோடு தோளாய் நின்றே

சாதிக் கொடுமை சகியாது
   சாடி மக்களை திருத்த
வாதியாய் நின்று பாடினான்
   வருணா சிரம்தனை எதிர்த்தான்
நாதியற்ற பாட்டாளி நீங்கள்
   நாலு சாதியாய் பிரிந்திருப்பதோ
ஓதினான் உலகிற்கு நீதி
   ஒற்றுமையே உயர்வுக்கு வழியென்று

பெண்ணின்  கைமை  நிலைகண்டு 
    புதியபாதை  கோடிட்டு காட்டினான்
வெண்சேலை விட்டு வெளிவர
    வேள்வி தீயை மூட்டினான்
எண்ணும் மனமும் எழுச்சியும்
    எல்லாம் நிறைந்தவள் பெண்ணவள்
பின்னும் ஏனோ வீழ்ச்சி
    பகர்வீர் பதிலை இந்நாளில்


தீந்தமிழ் உலகம் பரவிட
    திக்கெட்டும் தமிழன் புகழோங்கிட
அந்நிய மோகம் அழிந்திட
    அன்னைமொழி ஆட்சி மொழியாகிட
முந்தைய மூடவழக்கம் அகன்றிட
     மனதில் பகுத்தறிவு புகட்டி
வந்தே வாழ்வளித் திட்ட
     வேந்தன் கனகசுப்பு ரத்தினமே



கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...