திங்கள், மே 25

தீர்ப்புகள் திருத்தப்படலாம்



















சட்டவிரோத
செலாவணி முறைகேட்டில்
சிறை சென்றவர்
குற்றமற்றவர் என்றொரு தீர்ப்பு.

முப்பத்தொரு மாத
காராகிரகத்தில்
முடங்கிய நிறுவனத்தை
மூழ்கியதாய் அறிவித்தனர்.

திவால் நிறுவனத்தை
திறம்பட கையாள்வோர்
தேசத்தில் ஒருவரே என
காணிக்கையளித்தனர்.

கடன் கொடுத்த வங்கியோ,
கைக்குக் கிடைத்ததை விற்று,
வாராக்கடன் விதிப்படி
வரவு வைத்துக் கொண்டனர்.

ஆங்காங்கே வழக்குகள்
ஆதாரமில்லை என்றே,
அவரை விடுவிக்க
அந்தகாரம் எங்கெங்கும்.

வளர்ச்சி என்பது
தேசத்தில் ஒவ்வொருவரும்
ஒரு படி மேலேறுவதா?
ஒருவர் மட்டும் வாழ்வதா?

அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கோமாதா எங்கள் குலமாதா

  உழவர்களின் உபரி வருமானத்திற்கு உதவிய பசுக்களை , கோமியம் குடிப்பவர்கள் “ கோமாதா” என்று பாதுகாக்க கோடிகளில் நிதி ஒதுக்கிட , கொள்கை மு...