திங்கள், மே 25

புல்டோசர் இந்தியா

 







ஆறுகால பூஜையோ,
ஐந்துவேளை தொழுகையோ,
அவரவர் நம்பிக்கை—
அதில் புல்டோசர் ஏன்?

மசூதிகளை இடித்தால்
வீதிகளில் தொழுவோமென
மார்க்கத்தை நம்புபவர்கள்
மறுமொழி உரைத்திட,

இந்துகளுக்கு மட்டுமே
இவன் சேவை என்பதற்கா
இந்நாடு உருவாயிற்று?
அங்ஙனமெனில் அதை மாற்று.

மன்னனென அகங்காரமா?
மக்களுக்கு எதிராய் அரசாங்கமா?
மசூதிகளை இடிக்கவா
மக்களதிகாரம் அளித்தனர்?

அதிகாரமற்ற புல்டோசர்
அமைதியாய் இருக்கும்;
அரசு இயந்திரம் இயக்கிட
அடிபணியாது எதிர்த்திடும்.

சிறுபான்மையினர் என்றாலும்
சிறப்புடன் வாழ்ந்திடனும்;
சிரமம் என்றானால்
சீரழியும் சமூகமே!


. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

புல்டோசர் இந்தியா

  ஆறுகால பூஜையோ , ஐந்துவேளை தொழுகையோ , அவரவர் நம்பிக்கை— அதில் புல்டோசர் ஏன் ? மசூதிகளை இடித்தால் வீதிகளில் தொழுவோமென மார்க்கத்தை நம்...