சனி, மே 2
தாலி
பண்பாட்டின் சடங்கா?
பாவையின் அங்கமா?
எண்ணில்லா வடிவமா?
எதற்கென்று தெரியுமா—
பெண்ணினை அடிமையா,
பேரண்டம் முழுமையா?
கண்ணியாய் கைவிரலில்,
கழுத்தினில் கட்டியதோ?
அத்துகட்டி வாழ
அவளுக்குச் சுதந்திரமா?
வித்துபுட்டு குடிக்க
வீட்டிலிருக்கும் பண்டமா?
நித்தம் சுமங்கலியா,
நீங்காத அணிகலனா?
செத்துபுட்டா அறுத்து
செல்வியாக முடியுமா?
இடைஞ்சலென இரவில்
இலட்சினையைத் துறப்பதில்,
உடையவனும் உடன்பட,
ஊமையாய் கிடுமூரே;
அடையாள அடிமையிடம்
அக்கறை இல்லையெனில்,
மடைமாறும் அன்புதான்
மகமாயி மகிழ்ந்திடவே.
அருஞ்சுவை அன்பும்
அருகாமை இன்பமும்
கருப்பை நிரப்பல்ல
களிப்புடன் வாழ்ந்திடவே
பெருஞ்சுமை என்றானால்
பெரும்புராணம் ஏதுமின்றி
விரும்பியவழிச் சென்றிட
விவேகம் என்றறிந்தே
அச்சத்தில் ஆண்டாண்டு
அடையாள மாக்கியதை
துச்சமென தூக்கிவீசி
துணையிது வல்லவென்றே
இச்சமயம் இவளுரைக்க
இச்சட்டங்கள் மாளட்டுமே
சச்சரவின்றி சரிசமமாய்
சமூகத்தில் வாழட்டுமே
அ. வேல்முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
H₂O என்றால்...?
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம், அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும்...
-
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
புராணமோ புனைந்தக் கதையோ பொய்களின் மூட்டையோ பொறுமையாய் கேளுங்கள் வராக அவதாரத்தில் பூமாத் தேவியை தொட்டதால் பவுமன் பிறக்கிறான் அரக்கர்களை வென்ற...
-
கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள் காணவில்லை. ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டி...
-
கல்பனாக் கதையென்று காமகோடிக் கதைகட்டியப் பிறகு கடைகோடிச் சூத்திரன் நான் கதைச் சொன்னாக் கேட்பேளா கோபாலக் கிருஷ்ண பாரதியின் கோணல் வரிகளால் திர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக