வெள்ளி, ஏப்ரல் 10

திருமுகம் காண.......



உனதானா பெயரைக் கேட்டால்
    உயிர்துடிப்பு உயரஉயர எகிறுதடா
எனதானா நினைவு எங்கும்
   என்நெஞ்சம் ஏங்கேங்கி போகுதடா
திருமுகம் காணவே வேண்டுதலடா
  திருடா தினந்தினம் காட்டாயோ
வருமுகம் கன்னியான் அறிந்தாலோ
   வாடாதடா இந்த வாசமல்லி

தேக்கி வைச்ச ஆசையை
    திறந்துவிடு மேட்டுரூ அணைபோல
காக்க வச்சா தவிப்பேனே
    காய்ந்த  கடைமடை விவசாயியா
சொக்கி  நிற்கும் முல்லைதானே
    சூடிக் கொள்ள மயங்குதானே
முக்கி முத்தெடுக்கும் காலந்தானே
    மூன்றாம் சாமமும் நீளுந்தானே

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...