வெள்ளி, ஏப்ரல் 10

திருமுகம் காண.......



உனதானா பெயரைக் கேட்டால்
    உயிர்துடிப்பு உயரஉயர எகிறுதடா
எனதானா நினைவு எங்கும்
   என்நெஞ்சம் ஏங்கேங்கி போகுதடா
திருமுகம் காணவே வேண்டுதலடா
  திருடா தினந்தினம் காட்டாயோ
வருமுகம் கன்னியான் அறிந்தாலோ
   வாடாதடா இந்த வாசமல்லி

தேக்கி வைச்ச ஆசையை
    திறந்துவிடு மேட்டுரூ அணைபோல
காக்க வச்சா தவிப்பேனே
    காய்ந்த  கடைமடை விவசாயியா
சொக்கி  நிற்கும் முல்லைதானே
    சூடிக் கொள்ள மயங்குதானே
முக்கி முத்தெடுக்கும் காலந்தானே
    மூன்றாம் சாமமும் நீளுந்தானே

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...