வெள்ளி, மே 8

பட்டிபுலத்தானின் பரிதவிப்பு



பட்டினச் சிறகை
   பட்டிபுலத்தில் ஒடித்தது யாரோ?
எட்டின உறவாய்
   ஏமாற்றி மறைந்தது யாரோ?
கொட்டின அழகை
   கொள்வதற்குள் கொண்டதாரோ
கிட்டிட தவங்கள்
    கடவுள் கருணை புரிவாரோ

கெண்டை விழியாள்
   கொட்டிய சுகங்கள் அப்பப்பா
தண்டை மேனியாள்
   தவிக்க விட்டது அப்பப்பா
அண்டை நண்பனும்
   ஆகா  என்றதும் அப்பப்பா
முண்டா கட்டிட
   மனது எண்ணியதும் தப்பப்பா

கடலாடும் நேரத்தில்
   காரிகை நினைவில் வரவே
மடல்கள் மனதில்
   மாரிபோல் பொங்கி எழவே
ஊடலால் அவளோ
   உத்திரவு இன்றி  சென்றதாய்
வாடிய எனக்கு
   வருத்தி சமாதானம் சொன்னேன்

மௌனத்தில் என்னை
   மறந்து மறைந்து சென்றாயோ
யௌவனத்தில் கலை
   யிழந்து வாடுகிறேன் வாராயோ
அவ்வண்ணம் நீயிருந்தால்
   அடுத்த நொடியில் தோன்றாயோ
செவ்வண்ண இதழில்
     சிவக்க முத்தம் தாராயோ


குறிப்பு:   பட்டிபுலம் மாமல்லபுரம் அருகில் உள்ள கிராமம்
                  எழுதிய ஆண்டு 1992




வரட்சி

  மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...