வியாழன், மே 14

வாட்டல்




தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
                                                                                                    குறள் 1318


ஊடுவாள் எனவறிந்து
உள்ளடக்கினேன் தும்மலை
உணர்ந்தாளோ என்னவோ

உம்மவள் நினைப்பதை – நான்
உணராதிருக்க
உள்ளடக்கினீரோ என வதைத்தாள்

சூட்சமம்

காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...