ஞாயிறு, மே 8

அன்னையர் தினம் தேவையா?

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஏதாவது ஒரு தினத்தை எதற்காகவது கொண்டாட வேண்டுமென ஒதுக்க அதன்படி இன்றைய தினத்தை அன்னையர் தினமாக ஊடகங்கள் முதல் வியாபார நிறுவனங்கள் வரை கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் சொல்லுங்கள் எத்தனை பேர் அன்னையை மதிக்கின்றனர்.  சரி வேண்டாம் பெண்ணை மதிக்கின்றனர்.

ஒரு பட்டிமன்றம் தாயா, தாரமா.  பட்டினத்தார்  முதல் இன்றுவரை தாய் என்றே சொல்கின்றனர்.  அது என்ன தாரம்தானே தாயானாள்.  ஏன் பொண்டாட்டி தினம் என ஒன்று இல்லை.  காதலர் தினம் இருக்கிறது.  இந்த உலகத்தில் பொண்டாட்டி என்பது கீழ்தரம். காதலியும் அன்னையும் உயர்தரம்.  

பெண் பெண்டாட்டியானால் மதிப்பில்லை என்றாகிறது.  அன்னை என்றால் பாலூட்டி சீராட்டி என பட்டித்தாரும் பரிதவிக்கிறார். பரதேசியும் பரிதவிக்கின்றான்.

எத்தனை அன்னையர் முதியோர் இல்லத்தில், எத்தனை பெண்டாட்டிகள் கோர்ட் வாசலில்.

இது போன்ற தினங்கள் வியாபார நோக்கம் கொண்டது நாம் அதற்கு பலியாக வேண்டாம்

பெண் சக மனுஷி, ஆண் சக மனிதன், மனிதம் பேணுவோம்.  அனைவரையும் மதிப்போம்


சனி, மே 7

ஊடகமும் அதன் முதலாளிகளும்


கீழ்காணும் செய்தி ஒரு நண்பர் மின்னஞ்ஞல் மூலம் அனுப்பினார்.  இதன் உண்மைகளை நீங்களே முடிவு செய்யுங்கள்.  செய்தியின் முடிவில் பார்க்கும் போது இச்செய்தி யாருக்காக எழுதப்பட்டது என தெளிவாக தெரிகிறது.  எனினும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்














Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a Congress Minister has purchase this Telugu daily very recently.









வெள்ளி, மே 6

அட்சய திரிதியை


அள்ள அள்ள குறையாதாம்
அட்சய திரிதியில்
தங்கம் வாங்கினால்

வாங்கி வந்தேன்
வசதிக்கு தக்க
வளர்ந்ததோ என்றால்…

இருந்த தங்கத்தில்
இழந்தேன் ஒருகல்
இருந்தாலும் காத்திருக்கிறேன்

வசதி இருந்தால்
வங்கி பெட்டகத்தில்
வைக்குமளவு வாங்கலாம்

காசில்லை என்றால்
ஒசியிலும் வாராது
எத்தனை திரிதியை
     கடந்தாலும் வாராது

காசுள்ளவனுக்கே திரிதியை
இல்லாதவனுக்கு
கடன் வாங்கி திரிதியை

திரிதியை
கடன்காரன் ஆக்குமென்றால்
வாழ்நாள் முழுதும்
      நீ கடன்காரனே

திங்கள், மே 2

ஒசாமா-ஒபாமா



பத்து ஆண்டுகள்
பரலோகம் அனுப்ப
பார் ஆளும்
பாரக் ஒபமாவிற்கு

இங்கே
ஒபமா ஒப்புமைதான்
ஒபமா,புஷ்
இன்னும்
எத்தனை பெயர் வைத்தாலும்
பத்தாண்டுகள் என்பது......

மனித நாகரிகத்தின்
மதங்களின்
அச்சமூட்டும்
நச்சு - ஓசாமா

உலகின்
எந்த மூலையிலும்
தன்னால் வாழ முடியுமென்று
தொடை தட்டியவன்
தொலைந்து போனான்

ஓசாமாவின் ரசிகர்கள்
துக்கப்படலாம்
ஹமாசும்
வேதனைப்படலாம்

எதிரியின் எதிரி
நண்பனென்று
இன்னும் பலர்
பட்டியலில் சேரலாம்

ஊட்டி வளர்த்தவனே
உயிரை கொய்து விட்டான்
போட்டி என்பதால்
போட்டு தள்ளி விட்டான்

அரசியலின்
கொடுக்கல் வாங்கல் இது
ஆம் ஓபாமாவின்
வாங்கல்

ஒருவேளை
அடுத்த நான்காண்டு
அவரின் பதவிக்கான
உயிர் வாங்கலோ...........





வெள்ளி, ஏப்ரல் 29

மதமும் நரம்பு தளர்ச்சியும்

சமீபத்தில் எனது உறவுகார பெண்ணுக்கு திருமணம் நடைப் பெற்றது.   நாங்கள் அனைவரும் வாழ்த்திவிட்டு வந்தோம்.   மணப்பெண் நான்காண்டு மருத்துவ தாதியர் பட்டம் பெற்றவள்.   இரண்டாண்டு அப்பணியில் இருந்தவள்.

ஒரு வாரத்திற்குள் பிரச்சினை.   ஒன்றுமில்லை பலவீனத்தால்பேயாட்டம் ஆடிவிட்டாள்.  மாப்பிள்ளை வீட்டில் சந்தேகப் பார்வை.  மணமகன் பெண்ணை நன்றாக பார்த்துக் கொண்டார் ஆனால் உற்றார் உறவினர்களுக்கு பெண் வீட்டார் மீது கோபம்.    மருத்துவம் பார்த்து தற்போது நல்லபடியாக உள்ளார்.

விஷயம் இதுவல்ல

என் உறவினர்கள் நம்பிக்கை வேறுவிதம்.  பெண்ணுக்கு இப்பிரச்சனை சில நாட்களாக இருந்துள்ளது.   அதாவது தாதியர் படிப்பு படிக்கும்போதிலிருந்து.  அவளின் அப்பாவிற்கு யாரோ செய்வினை வைத்தார்களாம்.   அவரின் ஏழரை நாட்டு சனி முடியும் போதும் வினை இவளை தொற்றி கொண்டதாம்.   அதனால் கோயிலேறி வேப்பிலை அடித்து, மந்திரவாதி பார்த்து பேயோட்டி,  திருமணத்தை முடித்துள்ளனர்.

அய்யோ பேய் மட்டும் போகவில்லை அடிக்கடி தலை காட்டியபடி இருந்துள்ளது.

படிப்பு விடுதியில் என்பதால் தோழியர் வைத்தியமாய் பைபிளை கொடுத்து இயேசுவிடம் வேண்டுகோள் விடுக்க, தளர்ச்சி நீங்கியதாக பெண்ணுக்கு நம்பிக்கை.   இது பெற்றோரிடிம் கிருத்துவத்தில் மணமகன் பார்க்க வேண்டுமென்று சொல்லுமளவுக்கு இருந்தது.

அவரோ இந்து நான் என்று முடித்து விட்டார்.  இயேசு கைவிட்டு விட்டார்.  ஒரு வாரத்தில் இந்து பேயோ கிருஸ்துவ பேயோ பிடித்து அம்பலபட்டு விட்டார்கள்.

திரும்பவும், வேப்பிலை, பாய் மந்திரம் ஓதுவது,  தொடர்கதை,
மருத்துவம் துணைகதை

கைவிடுபவனே கடவுள் என எப்போது தெளிவர் எம் மக்கள்

தளர்ச்சிக்கு தேவை மருத்துவமா மதமா மனிதர்களே இப்போது சொல்லுங்கள்

வியாழன், ஏப்ரல் 28

அடிப்படை உரிமை

6 லிருந்து 14 வயது உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனம் சொல்கிறது.  அதற்கான சட்டம் இயற்றி ஒர் ஆண்டு முடிந்தும் விட்டது.  தனியார் பள்ளிகள் 25% குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

கொள்ளை அடிப்பவன் கூறுகிறான் அப்போ எனக்கு இன்னொரு வேளை பள்ளியை இயக்க அனுமதி கொடு.  அப்போதும் என்மீது எதையும் திணிக்க கூடாது என்கிறான்.

இலவசம் என்பது அரசியல் கட்சியின் வாக்குறுதி.  அதை அவர்களே நிறைவேற்றுவதில்லை.  தனியார் பள்ளி முதலாளிகள் கேட்பார்களா.  அரசு ஏன் இவர்களுக்கு ஏன் பள்ளி நடத்த அனுமதி கொடுத்தது.

இட நெருக்கடி மிக்க பள்ளிகள்.  அடைத்துக் கொண்டு வரும் பள்ளி வாகனங்கள், ஆய்வுகூடமில்லா பள்ளிகள், விளையாட்டு வசதிகள் துளியும்  இல்லா பள்ளி இயங்கி கொண்டுதானிருக்கின்றன.

படிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.15000 முதல் ரூ.100,000 வரை வசூலிக்கின்றனர். ஆண்டு துவக்கத்தில் தனிக் கட்டணம் என தனி வசூல்.  மக்கள் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர்.  ஆம் ஒவ்வொரு பெற்றோரும் தன்னை விட சிறந்த கல்வி தன் சந்ததி பெற வேண்டும் என்றுதானிருக்கின்றனர்.

அரசுக்கு வரி வாங்குவது மட்டும்தான் தன் வேலை.  சட்டம் இயற்றுவ்து தானும் ஏதோ செய்து விட்டோம் என கணக்கு காட்ட தானே தவிர அமுல் படுத்த அல்ல.

எல்லோரும் படித்து விட்டால்................

தன் வீட்டில் தான் சாப்பிட்ட தட்டு கழுவ ஆள் வைத்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் சிலர் புட்டபர்தியில் எச்சில் தட்டு கழுவி சேவை செய்வார்கள்.  கற்ற கல்வி அப்படி சிந்திக்க வைக்கிறது

சரி இதை விடுங்கள்

எல்லோரும் படித்து விட்டால்................

கொடி பிடிக்க, கள்ள ஓட்டு போட, காசு வாங்கி ஓட்ட போட , அடிதடி வேலை செய்ய ஆள் இல்லாமல் போய் விடும்

அப்புறம் எல்லோருக்கும் வேலை கொடுக்கனும்

அய்யோ அது இன்னொரு அடிப்படை உரிமை

செவ்வாய், ஏப்ரல் 26

தவறு

மோட்டார் சைக்கிளில் நான் என் குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்தேன்.  எனது மகள் பின்னிருக்கையில் இருந்தாள்.  ஒரு சிக்கனலை கடக்க வேண்டிய நேரம் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  எதிர் திசையில் யாரும் வரவில்லை என்பதால் பச்சை ஒளிர்வதற்கு முன்பே வண்டி நகர்த்தி சென்று விட்டேன்.  எனது மகள் கோபித்துக் கொண்டாள்.  அப்பா தவறு செய்கிறீர்கள்.  சிகப்பு இருக்கும் போது போக கூடாது என்று சொன்ன நீங்கள் ஏன் போகிறீர்கள் என்றாள்.

ஆம் கற்று கொடுத்த நமக்கு மகள் மிகச் சரியாக இடித்துரைக்கிறாள்.  5 ஆம் வகுப்பு செல்லும் அவள் கற்றதை கடை பிடிக்கிறாள்.   நாம்தான் மீறுகிறோம்.

ஆம் இது போன்ற விதிகளை மீறாமல் இருப்பது நலம்

ஞாயிறு, ஏப்ரல் 24

மிகப் பெரிய இழப்பு

உலகின் தலைச் சிறந்த தந்திரக்/மந்திர கலை நிபுணர் தனது 85 வயதில் காலமாகிவிட்டார்.  பலநாடுகளிலிருந்து மக்கள் வரவேண்டியிருப்பதால் அன்னாரின் ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க வரும் புதன் அன்று அவரின் இறுதி சடங்கு நடக்கும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கிறது.

அன்னாரின் இழப்பை அறிந்து துயருற்ற குடியரசு தலைவர், துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் வெளிப்படையாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கலை வெளிப்படையாக சொல்ல முடியாத கறுப்பு பண முதலைகள், முதலாளிகள், இன்னும் சில மனிதர்களுக்கும், ஏமாளி பக்தர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுக்கு கணக்கு வேண்டியதில்லை, இந்திய தண்டனைச் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை.  அப்படி ஓர் ஊர் இந்தியாவில் புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம்.   40000 கோடிகளுக்கு மேல் சொத்துக்களை கையாளும் ஓரு நிறுவனம் அரசுக்கு கணக்கே காண்பிப்பதில்லை.   ஆனால் சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் இறுதியில் வருமான வரி செலுத்தியே ஆக வேண்டும்.  இது இந்தியா

இந்த இந்தியாவின் மிகப் பெரிய மோடி மஸ்தான் வித்தைக்காரன் சத்திய சாய் பாபா என்று அறியப்பட்ட நபர் இவ்வுலகை விட்டு சென்றார்..

40000 கோடி நிறுவனம் அவனை கடவுளாக்கி கோவில் கட்டி அந்த தீபத்தை அணையாது காக்க முயல்வர்.   மக்களே புரிந்து கொள்ளுங்கள் அது காக்க வேண்டிய தீபமா.

ஞாயிறு, ஏப்ரல் 17

ஊழலுக்கு ஏதிராக

ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே போராட்டம் நடத்தினார்.  இன்றைய Times of India  செய்திகளை அவர் தொகுத்தளித்திருக்கிறார்.   ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டத்தையே திரட்டினார்.

அவருடைய வேண்டுகோள் ஊழல் செய்பவனை தண்டிக்க கோரும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.  நிறைவேறினாலும் செயல்படும் விதம் எப்படி இருக்கும் என மக்களே உங்களுக்கு தெரியாதா

எத்தனை கமிஷனை பார்த்தவர்கள் நீங்கள்

என்ன செய்திருக்கலாம்

ஓட்டெடுப்பில் மக்கள் யாரும் கலந்து கொள்ளாதீர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  ஏனென்றால் எல்லாம் கட்சியும் ஆட்சிக்கு வந்து ஊழல்தான் செய்திருக்கிறது. செய்யும்.

அப்படியிருக்கும் போது இவர் அவர்களிடமே சொல்கிறார் நீங்கள் ஊழல் செய்தால் உங்களை தண்டிக்க சட்டம் இயற்றுங்குகள்.  அதில் தானும் ஒரு உறுப்பினராக இருந்து மக்கள் சார்பாக கண்காணிக்கிறேன் என்கிறார்

மக்களே நம்புகள் நல்லவர் சொல்கிறார்.  யாரோடு சேர்ந்து கொண்டு என கவனியுங்கள்

400 ஆண்டுகள்

உலகம் உருண்டை, சூரியனை மைய்யமாக கொண்டு பூமி சுழல்கிறது என்று சொன்ன கலிலீயோவை 400 ஆண்டுகள் கழித்து அங்கீகரித்திருக்கிறது உலகின் கிருத்துவ அங்கீகார வாடிகன் அரசு.

மக்களோடு வாழ்ந்த வானவியல் அறிஞரை இவர்கள் என்ன அங்கீரிப்பது.  அவரின் தொலைநோக்கு கருவியை மக்களும், அறிவியலாளர்களும் அங்கீகரித்து 400 ஆண்டுகள் ஆகி விட்டது.

இப்போது இவர்கள் அங்கீகரிப்பதால் அறிவியல் மதத்தின் கட்டுபாட்டில் இருந்ததையும், அவர்கள் அங்கீகாரம் இல்லாது மக்களை சென்றடையாது என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மத வாதிகள் தோற்கும் போதெல்லாம் சமரசம் செய்து கொள்வார்கள்.  அதனால்தான் கலிலீயோவிற்கு இன்று அங்கீகாரம்

வியாழன், ஏப்ரல் 14

78%

தமிழக வரலாற்றின் முதல் முறையாக 78 % மேல் வாக்குபதிவு நடந்ததாக செய்தி.  புரியவில்லை, விலைவாசி ஏற்றம், ஏழ்மை, கல்வி மறுப்பு இத்தனை இருந்தும் மக்கள் இன்னும் இந்த ஜனநாயகத்தை நம்புகின்றனர்.

போன தேர்தலில் 1 லட்சத்தோடு வந்தவன் 6 கோடியுடன் மதிப்போடு மீண்டும் போட்டியிடுகிறான்

ஓட்டு போடாதே என்று தெரிந்தவர்கள், பார்த்தவர்கள் என பலரிடம் சொல்லியும் இந்த % கொஞ்சம் வேதனை பட வைத்தது

என்ன செய்வது மக்கள் இருக்கிற கொள்ளியில் எது நல்லது என தேர்ந்தெடுக்க முடிவெடுத்தால் நாம் என்ன செய்ய முடியும்

திங்கள், ஏப்ரல் 11

உரிமையோ உரிமை

ஏப்ரல் 13 உனது உரிமையை பதிவு செய்யும் நாள் இப்படி ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

எது உரிமை என்றேன்.  வாக்களிப்பது
அதுமட்டுமா? அதற்கப்புறம்

பெத்துக்கறது மட்டும் உரிமையென்று பிள்ளையை விட்டு விட்டு செல்வாயா அல்லது நல்லது கெட்டது சொல்லி வளர்ப்பாயா? தவறு எனில் அடித்து திருத்துவாயா அல்ல

பெத்ததோடு உரிமை முடிந்ததென்று விட்டு விடுவாயா என்றேன்

ஓட்டு போடுவது உரிமை என்றால் தவறு செய்தவனை தட்டிக் கேட்க உரிமையில்லை.  தவறு செய்தவனை திரும்ப அழைக்க உரிமையில்லை, அவனுக்கு பதில் புதியவனை தேர்ந்தெடுக்க உரிமையில்லை. இந்த உரிமையெல்லாம் எப்போ கிடைக்குமோ அப்போ

ஓட்டு போடுவோம்

அதுவரை
அந்த உரிமை பெற போராடுவோம்

சனி, ஏப்ரல் 2

இந்துத்துவம்

இன்று ஒரு குறுந்தகவல் எனக்கு வந்தது. அது இன்றைய கிரிக்கெட்டை பற்றியது.
The current circket World cup situation between IND Vs SRL as this:  India (Ram) married World cup (Sita) in 1983 and in 1996 Srilanka (Raavan) took away Sita (World cup).  Now after 14 years of Vanvaas, they meet again and you know the result.

நிச்சயமாக இது சில ஆயிரம் பெயரையாவது சென்றடைந்திருக்கும்.  கைபேசியிலிருந்து வேறு யாருக்கும் அனுப்ப மனமில்லை எனினும் எனது கருத்து.

இது விளையாட்டு ஆனால் அது அணுகப்படும் விதம் இராமன் இராவணன், சீதா.  என இந்துத்துவா திணிக்கப்படுகிறது.

மதம் என்பது அபின் என்றார் மார்க்ஸ்.  அந்த போதையில்தான் 14 ஆண்டுகள் கழித்து இராவணனிடமிருந்து சீதையை திரும்ப பெற இந்திய இராமன்கள் பாடுபடுகிறார்கள்.

நாம் சொல்வோம் இத்தனை ஆண்டுகள் கழித்து திரும்ப அழைப்பது நன்றாக இருக்காது சீதை இராவணனோடே வாழட்டும் என்று

அது சரி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கைமாறும் சீதையை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்

திங்கள், மார்ச் 21

முத்துப் பல்லழகி

முத்துப் பல்லழகி
மோகனச் சொல்லழகி
சித்தம் கலங்குதடி
சிரித்திடும் அழகிலடி

நித்தம் யோசனையடி
நீயெனக்கு சொந்தமென
தத்தம் செய்வாயோ
தடையென உரைப்பாயோ

ஆசை அடங்கலடி
ஆதலினால் வேணுமடி
மீசை துடிக்குதடி
மிச்சமும் உள்ளதடி

ஆவணம் செய்வாயென
ஆவலாய் இருக்கிறேனடி
தவணைத் தரலாமென
தள்ளிப் போடாதடி


அ. வேல்முருகன்

எங்கு சென்றாய் என்னவளே...

மங்கும் மாலை யெல்லாம்
         மங்கை உனது நினைவுதான்
அங்கு மிங்கும் சுற்றிய
         அந்த பொழுது இனிமைதான்
எங்கு சென்றாய் என்னவளே
         எதிலும் உனைநான் தேடுகிறேன்

தங்கமே உன்னை காணாது
         தவிப்பவனை தணிக்க வாராயோ
திங்கள் கடந்தும் அன்பே
         திசைதான் மறந்து போனாயோ
அங்கம் மெலிய அவரவர்
         ஆரிவன் என்று கேட்கின்றனர்

சித்திரமே என்சொத்து பத்திரமே
         சீக்கிரம் வந்திடு அருகே
நித்திரையும் எனக்கு சித்திரவதையே
         நீயிங்கு இல்லை உயிரே
முத்திரையாய் நின்னிதழ் பதித்தால்
         மூச்சுக்கு உத்திர வாதமே

கனவா?......... பேராசையா?........





மணமுடித்த மங்கையான்
        மனதில் கொண்டது ஆசையா
கனவாகும் காரணத்தால்
       கணக்குப் படியவை பேராசை
என்னவென கேள்வியால்
       ஏறிட்டு நோக்கும் விழிகளே
கணக்கிடும் தோல்வியால்
       கவலை தீரவும் வழியில்லை

கணவனுடன் கைக்கோர்த்து
        காலாற நடந்து மாலை
மணக்கும் மல்லிகை
         மரிக்கொழுந்துச் சூடி நல்ல
வண்ணத் திரைப்படம்
       வரும்வழியில் நல்உண வோடு
மென்பனிக் கூழருந்தி
        மஞ்சத்தில் மகிழ கனவு

வாக்கப்பட்ட மனுசனுக்கு
        வடித்துக் கொட்டி வசவுவாங்க
ஏக்கப்பட்ட மனதுக்குள்
        ஏகப்பட்டக் காயங்கள் உருவாக
ஆக்கப்பட்டக் கனவுகள்
       ஆப்பறைந்து யாவும் சருகாக
தாக்கப்பட்ட உணர்வுகள்
       தென்றலாய் மீண்டும் வருமோ

உள்ளக் கொதிப்பை
        உறவிடத்தில் சொல்லிக் கலங்கிட
தள்ளியது குழியென்று
       தானும் சேர்ந்து மருகிட
சொல்லியக் கனவுகளை
       சொந்தம் ஒருநாள் செய்திட்டு
மெல்லக் கூறியது
       மகளே இப்போது மகிழ்ச்சியா

இணையோ இதமோ
        இவர்கள் செய்வது எனக்கு
துணைதான் என்றாலும்
         துணையிணைப் போல வருமா
தொலைந்தது கிடைக்குமா
        துவளும் உள்ளத்தின் ஏக்கவினா
வலையில் விழுந்தபின்
        வாழ்க்கையை நினைப்பது வண்ணகனா

புதன், மார்ச் 16

ஓட்டு போடாதே

இந்த சொல் 80 களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் மூலம் அறிமுகமாகியது.  ஓட்டு போடும் வயது வந்த பருவம்.  அவர்கள் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக எனக்கு பட்டது.  அதிலிருந்து இன்றுவரை எந்தவொரு தேர்தலிலும் என்னுடைய கைவிரலை கரையாக்கிக் கொண்டதில்லை.

எத்தனையோ நண்பர்கள் உரிமை என்றனர். மற்றவர் கடமை என்றனர். மகஇக மட்டும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் உனக்கு வரும் போது தவறு செய்யும் இவர்களை திருப்பி அனுப்பும் உரிமை உனக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

வீட்டு அனுப்பும் உரிமை 356 பிரிவுக்கு உள்ளது.  முனுமுனுக்க கூட உனக்கு உரிமையில்லை. உரிமையில்லாததில் உனக்கென் வம்பு.

அரசியல் மக்களுக்கான சேவை என்பதிலிருந்து தொழில் என மாறி நீண்ட நாட்களாகி விட்டது எனவேதான் தேர்தல் ஆணையமும் ரூ.16 இலட்சம் மூதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது.  மூதலீடு மூழ்கிபோகலாம் அல்லது 300 மடங்காகவும் மாறலாம்

4 பேர் மூழ்க போகிறான். ஒருவன் 300 மடங்கு சாம்பாதிக்க போகிறான்.  நடுவில் நாம் எதற்கு எனவே அனைவரும்

ஓட்டு போட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

ஞாயிறு, மார்ச் 6

குழந்தை தேடிய கடவுள்

கடந்த ஞாயிறு
அடர்ந்த முடிதிருத்த
அகவை ஏழுகொண்ட
அருணனை
அழைத்துச் சென்றேன்

அருகிலிருந்த அங்காடியில்
வண்ண மீன்கள்
காதல் பறவைகள்
அவற்றோடு 
கோழிக் குஞ்சுகள்

ஆடிக் குதிக்கும் பருவத்தில்
ஆசை பிறந்தது
ஓரு குஞ்சு வளர்க்க
ஆயிரம் காரணம் சொல்லியும்
அடம் பிடித்ததால்
ஆகட்டுமென ஒன்று வாங்கினேன்

இருக்கும் மனிதருக்கே
இடப் பற்றாக்குறை
இதில் இரண்டாம்தளம் வேறு
இங்குமங்கும் பார்த்து
பலகனியில் இட ஓதுக்கீடு

கோதுமை அரிசி குருணை
குடிக்க தண்ணீர் என
குதுகல ஆரம்பம்

கோழிக்குஞ்சு வந்ததை
குடியிருப்பிலுள்ள
குட்டிக்களுக்கு தெரிவிக்க
அவர்களும் விஜயம்

அருணன்
படிப்பை மறந்தான்
விளையாட்டை மறந்தான்
நண்பர்களை மறந்தான்
ஆம் 
அவனுக்கு
தோழனாக
விளையாட்டு பொருளாக
ஆனது கோழிக்குஞ்சு

காலை கண்விழித்து
வணக்கம் சொல்வது
கொஞ்சுவது எல்லாம்
எங்களையல்ல... 
கோழிக்குஞ்சை 

மாலை பள்ளி விட்டதும்
அம்மாவை கேட்பது
கோழி சாப்பிட்டதா
தண்ணீர் குடித்ததா

இரவிலும் 
இதே கதை
அம்மா போ
எனது குட்டிக் கோழிக்கு
சாப்பாடு ஊட்டு

மகனின்
அன்பையும்
அதிகாரத்தையும் கண்டு
அவளுக்கு பூரிப்பு

அருகிலமர்ந்து
ஆனந்தப்பட்டு
தாவி மேலேறி
தவழ்நத அக்குஞ்சு
இன்றில்லை

ஏனம்மா செத்து போச்சு
உயிர் வராதா
ஒரே சோகம்

வாடிய முகம்
காலை உணவை மறுத்து
கவலையோடு உட்கார்ந்திருக்கிறது

அப்போதுதான் கேட்டான்
அம்மா 
கடவுள் உயிர் கொடுக்க மாட்டாரா

அம்மாவோ
செத்த பிறகு 
உயிரேது என்றாள்

ஆம் 
இருப்பவன் 
செய்த உயிரை
இல்லாதவன்
எப்படித் தரமுடியும்







மனிதம்

மனிதன் எந்த நிலையிலும் மனிதன்தான்.  கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை.  அலுவல உதவியாளனாய் ஒருவன் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிகிறான்.  அவனுடைய வேலை தண்ணீர், டீ கொடுப்பது அலுவலக கோப்புகளை கொண்டுவருவது.  என்னில் மூத்தவர், நிறுவனத்தின் நலனில் அக்கறை கொண்டவர் அந்த குறிப்பிட்ட உதவியாளன் கோப்புகளை எடுக்க அவர் அறைக்கு வரக் கூடாது அல்லது அலமாரியை அவர் அறைக்கு வெளியே வைக்க சொல்லிவிட்டார்.

ஏன் எதனால் இந்த செயல் அவருக்கே வெளிச்சம்


ஞாயிறு, பிப்ரவரி 13

16 லட்சம்

சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் 16 லட்சம் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கிறது.  16 முதலீடு செய்தால் பலகோடி நிச்சம் என்பதே இதன் பொருள்

அரசியல் என்பது மக்களுக்கான சேவை என்பதலிருந்து மாறி ஒரு தொழில் போல் செயல்படும் காலத்தில் 16 லட்சமென்ன 16 கோடி அல்ல எதற்கு வரையறை.  உடல் பலமிருப்பவனும் பணபலமிருப்பவனும் போட்டியிடலாம் என அறிவித்திருக்கலாம்

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...