சனி, ஜூன் 25

கருணாநிதியின் (& Co) அசையா சொத்துக்கள்

எனக்கு இன்று வந்த மின்னஞ்ஞல் செய்தி
1.    கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு கோடி.
 
2.    முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு கோடி
 
3.    முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு கோடி
 
4.    சொர்ணம் பெயரில் உள்ள வீடுகோபாலபுரம் மதிப்பு ரூ.கோடி
 
5.    மு.க.முத்து பெயரில் உள்ள வீடுகோபாலபுரம்மதிப்பு ரூ.கோடி
 
6.    அமிர்தத்தின் வீடுகோபாலபுரம் மதிப்பு ரூ.கோடி
 
7.    செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு கோடி.
 
8.    சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5கோடி.
 
9.    மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.
 
10.    ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி
 
11.   மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு கோடி.
 
12.   உதயநிதியின் ஸ்னோ பவுலிங்நுங்கம்பாக்கம் மதிப்பு கோடி.
 
13.   கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
 
14.   கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.
 
15.   ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு கோடி.
 
16.   கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் கிரவுண்ட் நிலம் மற்றும்அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.
 
17.   சன் கேபிள் வி஦#183ன்மஹாலிங்கபுரம்கோடம்பாக்கம் கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். கோடி.
 
18.    சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
 
19.   கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.
 
20.   பெங்களுரில் செல்வம் பெயரில் படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு கோடி.
 
21.    பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80கோடி.
 
22.   மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.
 
23.   பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.
 
24.    மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ்பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.
25.   மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.   மதிப்பு 30 லட்சம்.
 
26.   சன் டிவியின் டெல்லி அலுவலகம்.   மதிப்பு 50 கோடி.
 
27.   எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)
 
28.   தினகரன் பப்ளிகே஦#183ன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
 
29.   சுமங்கலி பப்ளிகே஦#183ன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
 
30.   முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)
 
31.   ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக,கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போததனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.
 
32.   தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில்மதுரை மாவட்டம்மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்
 
33.   தஞ்சாவூர் மாவட்டம்அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம்கருணாநிதி பெயரில்.
 
34.   தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு கோடி.
 
35.   துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம்திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.
 
36.     மதுரை வடக்கு தாலுகாஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2கோடி.
 
37.   மதுரை வடக்கு தாலுகாகள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு கோடி.
 
38.   மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர்அழகிரி பெயரில் மதிப்பு கோடி.
 
39.   மதுரை வடக்கு தாலுகாசின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு40 லட்சம்.
 
40.   மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
 
41.    மதுரை தெற்குமாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு கோடி.
 
42.   மதுரை தெற்குபொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2கோடி.
 
43.   மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு கோடி.
 
44.   மதுரை மாவட்டம்வாடிப்பட்டி தாலுகாதோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.
 
45.   மதுரை மாவட்டம்நாகைமலை புதுக்கோட்டைகே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
46.    மதுரை மாவட்டம்மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம்தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.
 
47.   மதுரைதிருமங்கலம்டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
 
48.   கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3சென்ட் நிலம். மதிப்பு கோடி.
 
49.    தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.
 
50.   சென்னைசோழிங்கநல்லூரில்தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5கோடி.
 
51.   சென்னை திருவான்மியூரில்தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு கோடி.
 
52.   காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில்மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு கோடி.
 
53.   சென்னை மாதவரம் பால்பண்ணைஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில்காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு கோடி.
 
54.   சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2கோடி.
 
55.   மதுரை மாவட்டம்சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.
 
56.   மதுரை மாட்டுத் தாவணிஅருகே கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.
 
57.   மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு கோடி.
 
58.    சென்னைஅண்ணா சாலைகதவு எண் 271-A என்ற முகவரியில் கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.
 
59.   வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.
 
60.   கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்குகுறைந்த பட்சம் 30 கோடி.
 
61.   ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.
 
உறுதி செய்யப் படாத சொத்துக்கள் 
 
62.    அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.
 
63.   கூர்க் பகுதியில் காபித் தோட்டம். 
 
64.   தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.
65.   எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக விமானங்கள்.
 
66.   மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனைமற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.
 
67.   சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம்மருத்துவமனையாக மாற்றப் பட்டுமாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.
 
68.   கோயம்பத்தூர்ப்ரூக்பாண்ட் சாலைப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம்கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
 
இது முழுமையான பட்டியல் அல்ல.   இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.  
  


சச்சினின் கார்

எத்தனையோ கார், பரிசாக கிடைத்த காரை விற்று விட்டார்.  ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.  அவரவர் ஒவ்வொரு கருத்தை வைக்கிறார்கள்

மகாத்மாவின் பேரன் துசார் சொல்கிறார், 9 ஆண்டுகளுக்கு முன் கார் பரிசாக கிடைத்த போது ரூ.1.13 கோடி வரி விலக்கு கேட்டார்.  அரசும் அளித்தது.

இப்போது ரூ,1.20 கோடி விற்று இருப்பார். இதன் லாபத்திற்கான வரிக்கு அரசிடம் விலக்கு கேட்பாரா அல்லது செலுத்துவாரா-?

பரிசை விற்கலாமா?  அன்பளிப்பாக கொடுத்திருக்கலாம்

மக்களே நீங்கள் சொல்லுங்கள்

அரசு வரிவிலக்கை திரும்ப பெற்றுக் கொள்வதுதானே முறை

இருப்பவர்தானே செலுத்தட்டும் வரியை

செவ்வாய், ஜூன் 21

இரயில் பயணங்களில்

கடந்த 24 நான்கு ஆண்டுகளில் இரயில் பேரூந்து என விதவிதமான பயணங்கள், நேற்றும் ஒரு இரயில் பயணம் அதன் அனுபவம்.............

திருப்பதி நோக்கி செல்லும் இரயில், பிராமண புரோகிதர், 50 வயதை கடந்திருப்பார், இரயில் திருத்தணியில் ஒரு பெண் தன் இரு குழந்தைகளோடு வருகிறார்.  அவரின் அருகே இடமிருந்ததால் அமருகிறார். சிறிது நேர பேச்சில் அப்பெண்ணின் 5 வயது குழந்தைக்கு பசிக்கிறதா என கேட்டு இரயிலில் வந்த நாவல் பழத்தை வாங்கி கொடுக்க முயல்கிறார்.  அக்குழந்தை வேண்டாம் என்கிறது

ஆனாலும் வாங்கி விடுகிறார். பழத்தை விற்றதும் ஒரு 12 வயதுள்ள பெண்தான்.  அவளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அவர் கொடுத்த விதம்.......  அப்பெண் சாதரணமாக கை நீட்டுகிறார்.   இவரோ கையை தூக்கி போடுகிறார்.

பழத்தை குழந்தை வாங்க வில்லை ஆக குழந்தையின் தாயிடம் திணிக்கிறார்.  இது சாதாரண செய்கை. இடையில் அவர் பேரன் பேத்தி கண்டவராம் அதனால்  பழத்தை வாங்கி கொள் என்று பேச்சு

ரேணிகுண்டா வந்தது.  தினத்தந்தி விற்றுக் கொண்டு வந்தான் ஒருவன்.  அவன் ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தான் அதை அவர் வாங்க வில்லை மொத்தமாக இருந்த ஒரு பேப்பரிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டார்.  காசு கொடுப்பதற்கு முன் போல் முயற்சி செய்தார்.   பேப்பர் விற்றவன் சன்னல் மீது வைக்க சொல்லி சைகை செய்தான்.  பிறகு அங்கிருந்து எடுத்துக் கொண்டான்.

மீண்டும் பயணம் தொடர, குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தார். இட்லி விற்றவனை நிற்க வைத்து பசிக்கிறதா என்றார்,  ஐஸ் கிரிம் விற்றவன், வடை விற்றவன், பிஸ்கட் விற்றவன் எல்லோரையும் நிற்க வைத்து பார்த்தார்.  அந்த குழந்தை எதையும் வாங்கவில்லை பேசவும் இல்லை அந்த மனிதனிடம்.


புதன், ஜூன் 15

ரூ,30000 கோடி காணவில்லை

அமெரிக்கா ஈராக்கு ரொக்கமாக அனுப்பிய ரூ.30000 கோடி அதாவது 6.6 பில்லியன் டாலர் காணாமல் போய் விட்டது.  சி.ஐ.ஏ வால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்து விட்டார்................ காணாமல் போய் விட்டது என்று

புஷ் ராஜ்ஜியத்தில் நடந்த கதையாம் நம்புங்கள் மக்களே

புதன், ஜூன் 1

முகத்தில் தெரியும் பீதி

ராம் சொன்னதாக ஜெ தன் தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.   யார் படிப்பார்கள். படிப்பதற்கு வசதியில்லா புத்தகம்.  புத்தகத்தில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.  அதற்குள் வெளித் தோன்றத்தை வைத்து கதைகள் தயார்.  

செவ்வாய், மே 31

கடவுளை உருவாக்கியவர்களின் கனவு

இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்ஞல்.  கடவுளை உருவாக்கியவர்களின் எதிர்கால கனவாகதான் எனக்கு தோன்றியது.  படித்து மகிழுங்கள்.
 
Techie God
Over the past several years, we have all learned to live with IVRS - 'Inter-active Voice Response System' as a necessary part of modern life. What would happen if God decides to go hi-tech and installs voicemail? 
 
Let us imagine a scenario. You dialled God's number.
 
'Hi! Thank you for calling God. Please select one of the following:
 
If you are Christian, dial 1
All Hindus, dial 2
All Muslims, dial 3
All others, dial 0.'
 
So, lets say you are a Hindu and you dialled 2. Here is what you hear:
 Press 1 for Requests
Press 2 for Thank you messages for God
Press 3 for Complaints about unfulfilled promises
Press 4 for All other inquiries.
If your prayers are still not answered, dial '0' and ask for Naradmuni.'
 Or, if all Gods were busy, you might hear this:
 'We are sorry, all our Gods are busy helping other Bhaktas and Sinners. However, your prayer is important to us and will be answered in the order it was received. Please stay on line. One of the Gods will be with you soon.' 
Or, it could even go this way when you start praying: 
'If you know your God's extension, dial it now.' 
Or, you might hear this: 
'If you would like to speak to Ganeshji, Press 1.
For Lord Hanuman, Press 2.
For Lord Krishna, Press 3.
To confess your sins, press 4.
To ask for favours, Press 5.'
 Or, you might even hear this:
 'You have reached Lord Krishna's extension. I am going to be away to conduct a special yuddha to save the humanity and will be away until the year 2012. If this is something urgent and cannot wait until then, call Shankara at GB +44  779000020000  Call. If you want to speak to someone else, for other gods' directory, Press 6 now.' 
Or you might even hear something like this if you call toward the end of your life cycle:
 'If you think you have reservations at our Heavenly Resort, please provide your name, social security number and be ready to provide the proof of your eligibility. If you do not have the proof of eligibility, please dial 420-HELL and ask for General Manager Ravana, who will be happy to help you.' 
Or, depending on the purpose of your call, you might hear this:
 'If you are calling to find out if a loved one has been assigned to Heaven, Press  5, enter his or her 'mantra' number, then press the 0 key. If you get a negative response, try area code 420-HELL.' 
For all you know in this day and age of quotas and all, you might even get a response like this:
 'Our computer records show that you have already prayed once today. Please hang up and try again tomorrow.'
 Or you might even here this if you call on the wrong day:
 'This Main Office of Heaven is closed for DIWALI holidays. If this is an emergency, you may try our Himalayan Retreat in the mean time by dialling 6000-31,000.'
 So, let us hope and pray that God never learns about computers - because if he does, we are in BIG trouble!

திங்கள், மே 23

கண்ணாளா

கோடைக் காலம்
குளு குளு
குலு மணாலி
செல்லலாமா

கிர்ணி, தர்பூசணி
இவற்றோடு
இளநீர்
பருகலாமா

தகதகக்கும் வெயிலில்
தகிக்கும் தேகம்
சுகிக்க வழி
சொல்லாயோ

குளிர்ந்த மோரோ
குடிக்க தண்ணீரோ
குளிர்சாதன கடைக்கு
கூட்டிச் செல்வாயோ

கோடையில் குதுகலிக்க
காதல் கண்ணாளா
கன்னியின்
கனவுகள் இவை

எண்ணங்களை
ஏட்டில் ஏழுதவில்லை
என் கண்ணில்
எழுதி வைத்தேன்

கண்டாயோ என்னவோ
கட்டிபிடி என்றாய்
கட்டுப் பட்டேன்
களிப்புற்றேன்

குற்றால அருவியோ
குளிர்ந்த காஷ்மீரோ
சிலிர்த்து உறைந்தேன்
சில்லென்ற நின்தேகத்தாலே

சனி, மே 21

வீடு


எலியும் பூனையும்
இன்ன பிற
“ஜந்துக்கள்” வசிக்க
எளிதாய் இருப்பிடம்
கண்டு பிடித்துவிடுகிறது

நான்கு சுவர்களுக்குள்
நாலும் நடப்பது
நாகரிகம் என்று
நகரினுள் தேடினேன்
நல்லதொரு வளை

மாட மாளிகைகள்
அடுக்கு மாடிகள்
புறாக் கூண்டுகள்
மாறா குடிசைகள்
தகுதிக்கேற்ற வளைகள்

விலைக்கென்றாலும்
வாடகைக்கென்றாலும்
“விஜ்டெரியன்” மட்டுமென
விளம்பரத்திலேயே சொல்லிடும்
விவரமானவர்கள்

லட்சத்தில்
லட்சணமான வீடு
லட்சிய இடத்தில் தேட
லாயக்கில்லை நாமென
பொருளாதாரம் சொல்லுது

அடுக்கில் ஒரு தளப்பகுதி
அதுவொரு கோடிக்கு மேல்
இடுக்கில் ஒரு பகுதியெனில்
இல்லை பல வசதிகள்
இருப்பினும் விலை இலட்சங்களில்தான்

ஆயிரங்களில்?…………..
ஆட்சி செய்வோர்
இலவச வீடென்றார்
அதுவொரு காடன்றோ
கடைகன்னியும் காத தூரமன்றோ

சராசரியும் நடுத்தரமும்
சந்தித்த வெளி
ஊருக்கு வெளி - ஆம்
புற நகரும்
புறா கூண்டுதான்

உழைப்பவனெல்லாம்
ஊருக்கு வெளியே
பேருக்கு வாழ்க்கை
ஆறு மணி வேலைக்கு
நாலு மணிக்கு புறப்பாடு

பேரூந்தோ இரயிலோ
போய் பிடிக்க
அரைமணி வேண்டும்
மருத்துவரோ மருந்தோ
பக்கத்து ஊருக்கு போக வேண்டும்

எப்படியோ
இந்த நகரில்
எல்லாம் கிடைக்க
இருபது ஆண்டு வேண்டும்

ஏரிக் குளமெல்லாம்
இல்லாதவர் இடமென
என்றிக்கையில்
வசதி வாரியமென
வாரி சுருட்டியது அரசு

எல்லோருக்கும் வளை
என்பது ஒரு கவலை
ஏக்கங்கள் கனவுகள்
என்று நிறைவேறும்?........
நன்று யோசியுங்கள்……….

வெள்ளி, மே 20

பெண் என்றால்

வேலைக்குச் செல்லும் பெண் என்றால் கேவலமா?  எப்படியும் வாழலாம் என நினைப்பவளா? இப்படியொரு கேள்வி என்னிடம்

ஒருசாண் வயிற்று உணவு, அதற்காகதானே உழைப்பு, உழைக்கதானே வெளியே  வருகிறோம். வெளியில் வருமிடம் பாதுகாப்பு நிறைந்தது என்றால்தான் நம்பிக்கை.

மனம் பாதித்த கேள்வி.  பதில் சொல்ல இயலாமல் தவித்து நின்றேன்.

வேலூர்

எத்தனையோ சிறப்புகள் உண்டு வேலூர் மாவட்டத்திற்கு.

நேற்று எனக்கு வேறுபட்ட அனுபவம்.  உறவுகாரர்களை பார்க்க பயணம். இனிப்பைக் காட்டிலும் பழங்கள் உடலுக்கு நல்லது என்பதால் பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் பழ கடைக்குச் சென்றேன்.  ஆப்பிள் 1 கிலோ விலை ரூ.140 பேரத்தில் ரூ.10 தள்ளுபடி எடையை பார்த்தால் 750 கிராம்.  சரியென்று வேறு கடைக்கு சென்றேன். திராட்சை 1/4 கிலோ ரூ.30,      சரி 1/2  கிலோ கொடு என்றேன்.  600 கிராம் படிக் கல்லை வைத்து எடை போட்டால் 1/4 கிலோவிற்கும் குறைவான எடை.  பார்த்தேன் வேலூரில் பழம் வாங்கும் ஆசையே போய்விட்டது.

இது என்ன வாழ்க்கை. கண் முன்னே ஏமாற்றுவது.   அதற்கு கூறு கட்டி வியபாரிடமே வாங்கலாம்.  எவ்வளவுக்கு எவ்வளவு என்று தெரிந்தே வாங்குகிறோம்.  கேட்டது ஒன்று கிடைப்பது ஒன்று என்றால்......... அதுவும் ஏமாற்றபடுகிறோம் என்றால்...........

செவ்வாய், மே 17

கடவுளுக்கும் வேனிற்கால விடுமுறை


24 மணிநேரமும்
இகலோக மனிதர்களிடம்
சஞ்சரித்து
இம்சை கொண்டார்

பாவ புண்ணியங்களுக்கு
மன்னிப்பு அளித்து
பைத்தியம் பிடித்துவிட்டது
பரமபிதாவின் வாரிசுக்கு

ஓய்வு
உல்லாசம்
விடுமுறை
எதையோ சொல்லிக்கொள்ளுங்கள்

உழைத்து களைப்பவருக்குதான்
ஓய்வும் உல்லாசமா
உலகையே ரட்சிப்பவருக்கும்
ஓர் உல்லாசம் தேவைதான்

வெனீஸ் நகரத்தின்
வீதியுலாவை காட்டிலும்
வளைந்து நெளிந்து செல்லும்
கொண்டேலா படகு பயணம்
புது அனுபவம் – கடவுளுக்கு

ஆண்டவரின் பயணமென்றால்
அதற்கேற்ற
அணிவகுப்பு, அலங்காரம்
ஆகா கண்கொள்ளா காட்சி

தென்றலோ புயலோ
திசை திருப்பும்
வல்லமை கொண்டவர் – தன்
திருமுடி இழந்தார்

ஆம்
காற்றில் கிரீடம்
கழன்று விடுமென்று
கழற்றி வைத்து விட்டாராம்

விவசாயமும் வங்கி கடனும்



கடனின்றி நாடே இயங்க முடியாதபோது.  சாதாரண விவசாயி கடனின்றி வாழ முடியுமா?  விவசாயிகள் பயிர் கடன், தங்க நகை கடன், உழுபடைக் கருவிகள் வாங்க கடன் என பல கடன்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பெறுகின்றனர்.  இதை தவிர்த்து கந்து வட்டிக்கு கடன் வாங்கி கந்தலாகி போவான்  அது தனிக்கதை.
60000 கோடி தள்ளுபடி, ஆக பெரும்பான்மை விவசாயிகள் மகிழ்ந்தார்கள் ஆனால் என்ன நடந்த்து.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஓர் ஆண்டு காலம் தள்ளுபடி என வசூலை தள்ளிப் போட்டனர்.  2010-11 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் குறைந்த்து 3000 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன விவசாயிகளிடமிருந்து.
டிராக்டர்கள், உழுபடை கருவியில் பிரதானம்.  ஆனால் இது நகரங்களில் உழுவதற்கு பயன்படாமல், மணல், செங்கல் கொண்டு செல்லவும், தண்ணீர் கொண்டு செல்லவும் பயன் படுத்தப்படுகிறது.
ஆனால் ஒரு விவசாயி எப்படி டிராக்டர் வாங்குகிறான் என்று கவனிக்க வேண்டும்.  முன்பெல்லாம் 10 ஏக்கர் நிலமுள்ள விவசாயி டிராக்டர் கடன் வாங்க வங்கியை அணுகலாம் என்றிருந்த்து.  ஆனால் தற்போது 4 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் வாங்கலாம் என மாற்றியமைத்தனர்.  யாருக்காக என்பது?.........
ஒரு கிராமத்தில் எத்தனை டிராக்டர் தேவை என்பது முக்கியம்.  ஆனால் டிராக்டர் கம்பெனிகளுக்கு  ஒவ்வொரு விவசாயியும் டிராக்டர் வைத்திருக்க வேண்டும் என்பது கனவு.  
கூட்டு திட்டம் டிராக்டர் கம்பெனிக்கு விற்பனை இலக்கு.  வங்கி மேலாளருக்கு விவசாய கடன் இலக்கு.  அதனால்தான் தேவையே இல்லாமல் ஒரு கிராமத்தில் 10 டிராக்டர்களுக்கு மேல்.  சொந்த தேவைக்கு பிறகு வருமானம் ஈட்ட இயலாமல் வெறுமனே நிற்கிறது அந்த டிராக்டர்.   எட்டு லட்சம் முதலீடு முடங்கியது.  வட்டியும் கூடிக் கொண்டே செல்கிறது.
அரசியல்வாதிக்கு ஓட்டு வேண்டும்.  வருமானம் இல்லாமல் வட்டி கட்ட முடியாமல் இருக்கும் விவசாயி கண்ணுக்கு தெரிகின்றான்.  8% கூட்டு வட்டி தள்ளுபடியாகிறது.  அசல் அப்படியேதான் நிற்கிறது.
ஊடகங்கள் அலறுகிறது. வங்கியின் வாராக் கடனில் விவசாயக் கடன் இத்தனை சதவீதம்.  இலாபத்தில் வராக்கடன் ஓதுக்கீடு இத்தனை சதவீதம்.  இலாபம் குறைந்துவிட்டது என கூப்பாடு.

வங்கிகளின் தலைவர்கள் கூடினர். விவசாயிகளிடம் பறிமுதல் செய்வது என முடிவு அறிவிக்கப்படுகிறது. என்ன செய்வது விவசாயி மீண்டும் கடன்காரனாகிறான்.  இருக்கும் தங்கத்தையோ எதையோ விற்று மீட்கிறான் தன் மானத்தையும், டிராக்டரையும்.  முடியாதவன் தோற்றுப் போகிறான்.

இடைத்தரகர்கள், விற்பனை பிரதிநிதிகள்,  வங்கி மேலாளர்கள், பணத்தோடு பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர்.  வண்டி வாங்கியவன் கௌரவம் கொண்டான்.  எத்தனை நாட்களுக்கு............
தற்போது பறிமுதல் செய்வதற்கு இலக்கு.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு வங்கி கிளையிலும் 100 முதல் 150 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்கபட்டிருக்கிறது.  இவை அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் நடவடிக்கை.  தனியார் வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இதைதான் செய்கின்றன.

எட்டு லட்சத்திற்கு வாங்கிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட பின் மூன்று முதல் நான்கு லட்ச ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.  நாள்தோறும் செய்தி தாளை பாருங்கள் வங்கிகள் டிராக்டர்களை ஏலம் விடும் அறிவிப்பு வெளியாவதை. சமீபத்தில் வங்கியின் ஏல நடவடிக்கையை ஓர் ஆர்பாட்டம் மூலம் தடுத்து நிறுத்தின்ர்.  அது தற்காலிகமானது. எப்படியும் பணம் கட்டினால்தான் டிராக்டர் விடுவிக்கப்படும் அல்லது மீண்டும் விற்கப்படும். விற்பனைத் தொகை கடனில் கழிக்கப்பட்டது.   மீதி தொகைக்கு வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.   பாடுபட்டுழைத்த பணத்தை பறி கொடுத்தவன் நீதி மன்றம் ஏற வேண்டும்.  முடிவில் ஈடாக கொடுத்த நிலத்தை இழக்கிறான்.  உழவனோ ஓட்டாண்டியாகிறான்

சனி, மே 14

மகிழ்ச்சி

மகிழ்ச்சி இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அதன் அளவு அதிகரிக்கிறது.  நானும் ஒரு செய்தியை தளத்தில் எழுத வேண்டும் என எண்ணும் போது எனக்கு முனனே தங்களின் மகிழ்ச்சியை இங்கே இவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.  இது நாடு முழுதும் தொடர வேண்டும் என்று கருத்திட்டிருக்கிறார்கள்.

எனது எண்ணமும் அவர்களோடு ஒத்துபோவதால் அவர்களின் எழுத்துக்களையே படியுங்கள்

குருத்து
கவிதை வீதி
கிருஷ்ணமூர்த்தி
சங்கரியின் செய்திகள்

தம்பையா

சென்னையின் பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல உலகில் பல்வேறு மக்கள் அறிந்த மிகச் சிறந்த தோல் சிகிச்சை மருத்துவர் தம்மையா அவர்கள் மரணம் அடைந்து விட்டார்.  தாசப்பிராகாஷ் எதிரில் அவருடைய மருத்துவமனையில் எப்போதும் நீண்ட வரிசை இருக்கும்.  எல்லோரும் வரிசையில்தான் வர வேண்டும். டோக்கன் கிடையாது. அப்பாயின்மெண்டு கிடையாது.  ரூ. 30 தான் அவருடைய பார்வை கட்டணம்.

செய்தியை கண்டேன்.  மருத்துவதை மணந்து கொண்டதால் தனக்கு தனிப்பட்ட துணையை கொள்ள வில்லை என.  1948 மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று இத்தனை ஆண்டு காலம் மக்களுக்கான சேவை செய்த ஒரு மருத்துவர் இன்றில்லை நம்மிடையே.  அவரின் சேவையை அவருடை மாணக்கர்கள் கண்டிப்பாக தொடர்வார்கள்

போராட்டம்

கருணைமிக்க இளம் தலைவர் ராகுல்  விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள் என்று கண்விழித்து, மோட்டார் சைக்கிள் பயணம் செய்து இரவு வரை போராடி போலீஸரால் கைது செய்யப்பட்டார்.  தலித்துகளின் விடிவெள்ளி மாயாவதி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி தன் குடும்பத்தார் செழிக்க வகை செய்கிறார் என்றொரு குற்றச்சாட்டு.

காங்கிரஸ் என்றால் நீலிக் கண்ணீர் வடிப்பது. மராட்டியத்தில் விதர்பா விவசாயிகள், பிளாச்சிமடா விவசாயிகள், ஆந்திரத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதொல்லாம் அவர்களோடு இந்த கருணைமிக்க இளம் தலைவர் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தார்

என்ன செய்வது,   தான் செய்வதை அடுத்தவன் செய்தால் குற்றம்.  50 ஆண்டுகால ஆண்டைகளின் வாரிசு பயிற்சி எடுக்கும் வகை இதுதான்

ஞாயிறு, மே 8

அன்னையர் தினம் தேவையா?

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஏதாவது ஒரு தினத்தை எதற்காகவது கொண்டாட வேண்டுமென ஒதுக்க அதன்படி இன்றைய தினத்தை அன்னையர் தினமாக ஊடகங்கள் முதல் வியாபார நிறுவனங்கள் வரை கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் சொல்லுங்கள் எத்தனை பேர் அன்னையை மதிக்கின்றனர்.  சரி வேண்டாம் பெண்ணை மதிக்கின்றனர்.

ஒரு பட்டிமன்றம் தாயா, தாரமா.  பட்டினத்தார்  முதல் இன்றுவரை தாய் என்றே சொல்கின்றனர்.  அது என்ன தாரம்தானே தாயானாள்.  ஏன் பொண்டாட்டி தினம் என ஒன்று இல்லை.  காதலர் தினம் இருக்கிறது.  இந்த உலகத்தில் பொண்டாட்டி என்பது கீழ்தரம். காதலியும் அன்னையும் உயர்தரம்.  

பெண் பெண்டாட்டியானால் மதிப்பில்லை என்றாகிறது.  அன்னை என்றால் பாலூட்டி சீராட்டி என பட்டித்தாரும் பரிதவிக்கிறார். பரதேசியும் பரிதவிக்கின்றான்.

எத்தனை அன்னையர் முதியோர் இல்லத்தில், எத்தனை பெண்டாட்டிகள் கோர்ட் வாசலில்.

இது போன்ற தினங்கள் வியாபார நோக்கம் கொண்டது நாம் அதற்கு பலியாக வேண்டாம்

பெண் சக மனுஷி, ஆண் சக மனிதன், மனிதம் பேணுவோம்.  அனைவரையும் மதிப்போம்


சனி, மே 7

ஊடகமும் அதன் முதலாளிகளும்


கீழ்காணும் செய்தி ஒரு நண்பர் மின்னஞ்ஞல் மூலம் அனுப்பினார்.  இதன் உண்மைகளை நீங்களே முடிவு செய்யுங்கள்.  செய்தியின் முடிவில் பார்க்கும் போது இச்செய்தி யாருக்காக எழுதப்பட்டது என தெளிவாக தெரிகிறது.  எனினும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்














Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a Congress Minister has purchase this Telugu daily very recently.









வெள்ளி, மே 6

அட்சய திரிதியை


அள்ள அள்ள குறையாதாம்
அட்சய திரிதியில்
தங்கம் வாங்கினால்

வாங்கி வந்தேன்
வசதிக்கு தக்க
வளர்ந்ததோ என்றால்…

இருந்த தங்கத்தில்
இழந்தேன் ஒருகல்
இருந்தாலும் காத்திருக்கிறேன்

வசதி இருந்தால்
வங்கி பெட்டகத்தில்
வைக்குமளவு வாங்கலாம்

காசில்லை என்றால்
ஒசியிலும் வாராது
எத்தனை திரிதியை
     கடந்தாலும் வாராது

காசுள்ளவனுக்கே திரிதியை
இல்லாதவனுக்கு
கடன் வாங்கி திரிதியை

திரிதியை
கடன்காரன் ஆக்குமென்றால்
வாழ்நாள் முழுதும்
      நீ கடன்காரனே

திங்கள், மே 2

ஒசாமா-ஒபாமா



பத்து ஆண்டுகள்
பரலோகம் அனுப்ப
பார் ஆளும்
பாரக் ஒபமாவிற்கு

இங்கே
ஒபமா ஒப்புமைதான்
ஒபமா,புஷ்
இன்னும்
எத்தனை பெயர் வைத்தாலும்
பத்தாண்டுகள் என்பது......

மனித நாகரிகத்தின்
மதங்களின்
அச்சமூட்டும்
நச்சு - ஓசாமா

உலகின்
எந்த மூலையிலும்
தன்னால் வாழ முடியுமென்று
தொடை தட்டியவன்
தொலைந்து போனான்

ஓசாமாவின் ரசிகர்கள்
துக்கப்படலாம்
ஹமாசும்
வேதனைப்படலாம்

எதிரியின் எதிரி
நண்பனென்று
இன்னும் பலர்
பட்டியலில் சேரலாம்

ஊட்டி வளர்த்தவனே
உயிரை கொய்து விட்டான்
போட்டி என்பதால்
போட்டு தள்ளி விட்டான்

அரசியலின்
கொடுக்கல் வாங்கல் இது
ஆம் ஓபாமாவின்
வாங்கல்

ஒருவேளை
அடுத்த நான்காண்டு
அவரின் பதவிக்கான
உயிர் வாங்கலோ...........





வெள்ளி, ஏப்ரல் 29

மதமும் நரம்பு தளர்ச்சியும்

சமீபத்தில் எனது உறவுகார பெண்ணுக்கு திருமணம் நடைப் பெற்றது.   நாங்கள் அனைவரும் வாழ்த்திவிட்டு வந்தோம்.   மணப்பெண் நான்காண்டு மருத்துவ தாதியர் பட்டம் பெற்றவள்.   இரண்டாண்டு அப்பணியில் இருந்தவள்.

ஒரு வாரத்திற்குள் பிரச்சினை.   ஒன்றுமில்லை பலவீனத்தால்பேயாட்டம் ஆடிவிட்டாள்.  மாப்பிள்ளை வீட்டில் சந்தேகப் பார்வை.  மணமகன் பெண்ணை நன்றாக பார்த்துக் கொண்டார் ஆனால் உற்றார் உறவினர்களுக்கு பெண் வீட்டார் மீது கோபம்.    மருத்துவம் பார்த்து தற்போது நல்லபடியாக உள்ளார்.

விஷயம் இதுவல்ல

என் உறவினர்கள் நம்பிக்கை வேறுவிதம்.  பெண்ணுக்கு இப்பிரச்சனை சில நாட்களாக இருந்துள்ளது.   அதாவது தாதியர் படிப்பு படிக்கும்போதிலிருந்து.  அவளின் அப்பாவிற்கு யாரோ செய்வினை வைத்தார்களாம்.   அவரின் ஏழரை நாட்டு சனி முடியும் போதும் வினை இவளை தொற்றி கொண்டதாம்.   அதனால் கோயிலேறி வேப்பிலை அடித்து, மந்திரவாதி பார்த்து பேயோட்டி,  திருமணத்தை முடித்துள்ளனர்.

அய்யோ பேய் மட்டும் போகவில்லை அடிக்கடி தலை காட்டியபடி இருந்துள்ளது.

படிப்பு விடுதியில் என்பதால் தோழியர் வைத்தியமாய் பைபிளை கொடுத்து இயேசுவிடம் வேண்டுகோள் விடுக்க, தளர்ச்சி நீங்கியதாக பெண்ணுக்கு நம்பிக்கை.   இது பெற்றோரிடிம் கிருத்துவத்தில் மணமகன் பார்க்க வேண்டுமென்று சொல்லுமளவுக்கு இருந்தது.

அவரோ இந்து நான் என்று முடித்து விட்டார்.  இயேசு கைவிட்டு விட்டார்.  ஒரு வாரத்தில் இந்து பேயோ கிருஸ்துவ பேயோ பிடித்து அம்பலபட்டு விட்டார்கள்.

திரும்பவும், வேப்பிலை, பாய் மந்திரம் ஓதுவது,  தொடர்கதை,
மருத்துவம் துணைகதை

கைவிடுபவனே கடவுள் என எப்போது தெளிவர் எம் மக்கள்

தளர்ச்சிக்கு தேவை மருத்துவமா மதமா மனிதர்களே இப்போது சொல்லுங்கள்

வியாழன், ஏப்ரல் 28

அடிப்படை உரிமை

6 லிருந்து 14 வயது உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனம் சொல்கிறது.  அதற்கான சட்டம் இயற்றி ஒர் ஆண்டு முடிந்தும் விட்டது.  தனியார் பள்ளிகள் 25% குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

கொள்ளை அடிப்பவன் கூறுகிறான் அப்போ எனக்கு இன்னொரு வேளை பள்ளியை இயக்க அனுமதி கொடு.  அப்போதும் என்மீது எதையும் திணிக்க கூடாது என்கிறான்.

இலவசம் என்பது அரசியல் கட்சியின் வாக்குறுதி.  அதை அவர்களே நிறைவேற்றுவதில்லை.  தனியார் பள்ளி முதலாளிகள் கேட்பார்களா.  அரசு ஏன் இவர்களுக்கு ஏன் பள்ளி நடத்த அனுமதி கொடுத்தது.

இட நெருக்கடி மிக்க பள்ளிகள்.  அடைத்துக் கொண்டு வரும் பள்ளி வாகனங்கள், ஆய்வுகூடமில்லா பள்ளிகள், விளையாட்டு வசதிகள் துளியும்  இல்லா பள்ளி இயங்கி கொண்டுதானிருக்கின்றன.

படிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.15000 முதல் ரூ.100,000 வரை வசூலிக்கின்றனர். ஆண்டு துவக்கத்தில் தனிக் கட்டணம் என தனி வசூல்.  மக்கள் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர்.  ஆம் ஒவ்வொரு பெற்றோரும் தன்னை விட சிறந்த கல்வி தன் சந்ததி பெற வேண்டும் என்றுதானிருக்கின்றனர்.

அரசுக்கு வரி வாங்குவது மட்டும்தான் தன் வேலை.  சட்டம் இயற்றுவ்து தானும் ஏதோ செய்து விட்டோம் என கணக்கு காட்ட தானே தவிர அமுல் படுத்த அல்ல.

எல்லோரும் படித்து விட்டால்................

தன் வீட்டில் தான் சாப்பிட்ட தட்டு கழுவ ஆள் வைத்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் சிலர் புட்டபர்தியில் எச்சில் தட்டு கழுவி சேவை செய்வார்கள்.  கற்ற கல்வி அப்படி சிந்திக்க வைக்கிறது

சரி இதை விடுங்கள்

எல்லோரும் படித்து விட்டால்................

கொடி பிடிக்க, கள்ள ஓட்டு போட, காசு வாங்கி ஓட்ட போட , அடிதடி வேலை செய்ய ஆள் இல்லாமல் போய் விடும்

அப்புறம் எல்லோருக்கும் வேலை கொடுக்கனும்

அய்யோ அது இன்னொரு அடிப்படை உரிமை

செவ்வாய், ஏப்ரல் 26

தவறு

மோட்டார் சைக்கிளில் நான் என் குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்தேன்.  எனது மகள் பின்னிருக்கையில் இருந்தாள்.  ஒரு சிக்கனலை கடக்க வேண்டிய நேரம் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  எதிர் திசையில் யாரும் வரவில்லை என்பதால் பச்சை ஒளிர்வதற்கு முன்பே வண்டி நகர்த்தி சென்று விட்டேன்.  எனது மகள் கோபித்துக் கொண்டாள்.  அப்பா தவறு செய்கிறீர்கள்.  சிகப்பு இருக்கும் போது போக கூடாது என்று சொன்ன நீங்கள் ஏன் போகிறீர்கள் என்றாள்.

ஆம் கற்று கொடுத்த நமக்கு மகள் மிகச் சரியாக இடித்துரைக்கிறாள்.  5 ஆம் வகுப்பு செல்லும் அவள் கற்றதை கடை பிடிக்கிறாள்.   நாம்தான் மீறுகிறோம்.

ஆம் இது போன்ற விதிகளை மீறாமல் இருப்பது நலம்

ஞாயிறு, ஏப்ரல் 24

மிகப் பெரிய இழப்பு

உலகின் தலைச் சிறந்த தந்திரக்/மந்திர கலை நிபுணர் தனது 85 வயதில் காலமாகிவிட்டார்.  பலநாடுகளிலிருந்து மக்கள் வரவேண்டியிருப்பதால் அன்னாரின் ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க வரும் புதன் அன்று அவரின் இறுதி சடங்கு நடக்கும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கிறது.

அன்னாரின் இழப்பை அறிந்து துயருற்ற குடியரசு தலைவர், துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் வெளிப்படையாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கலை வெளிப்படையாக சொல்ல முடியாத கறுப்பு பண முதலைகள், முதலாளிகள், இன்னும் சில மனிதர்களுக்கும், ஏமாளி பக்தர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுக்கு கணக்கு வேண்டியதில்லை, இந்திய தண்டனைச் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை.  அப்படி ஓர் ஊர் இந்தியாவில் புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம்.   40000 கோடிகளுக்கு மேல் சொத்துக்களை கையாளும் ஓரு நிறுவனம் அரசுக்கு கணக்கே காண்பிப்பதில்லை.   ஆனால் சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் இறுதியில் வருமான வரி செலுத்தியே ஆக வேண்டும்.  இது இந்தியா

இந்த இந்தியாவின் மிகப் பெரிய மோடி மஸ்தான் வித்தைக்காரன் சத்திய சாய் பாபா என்று அறியப்பட்ட நபர் இவ்வுலகை விட்டு சென்றார்..

40000 கோடி நிறுவனம் அவனை கடவுளாக்கி கோவில் கட்டி அந்த தீபத்தை அணையாது காக்க முயல்வர்.   மக்களே புரிந்து கொள்ளுங்கள் அது காக்க வேண்டிய தீபமா.

ஞாயிறு, ஏப்ரல் 17

ஊழலுக்கு ஏதிராக

ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே போராட்டம் நடத்தினார்.  இன்றைய Times of India  செய்திகளை அவர் தொகுத்தளித்திருக்கிறார்.   ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டத்தையே திரட்டினார்.

அவருடைய வேண்டுகோள் ஊழல் செய்பவனை தண்டிக்க கோரும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.  நிறைவேறினாலும் செயல்படும் விதம் எப்படி இருக்கும் என மக்களே உங்களுக்கு தெரியாதா

எத்தனை கமிஷனை பார்த்தவர்கள் நீங்கள்

என்ன செய்திருக்கலாம்

ஓட்டெடுப்பில் மக்கள் யாரும் கலந்து கொள்ளாதீர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  ஏனென்றால் எல்லாம் கட்சியும் ஆட்சிக்கு வந்து ஊழல்தான் செய்திருக்கிறது. செய்யும்.

அப்படியிருக்கும் போது இவர் அவர்களிடமே சொல்கிறார் நீங்கள் ஊழல் செய்தால் உங்களை தண்டிக்க சட்டம் இயற்றுங்குகள்.  அதில் தானும் ஒரு உறுப்பினராக இருந்து மக்கள் சார்பாக கண்காணிக்கிறேன் என்கிறார்

மக்களே நம்புகள் நல்லவர் சொல்கிறார்.  யாரோடு சேர்ந்து கொண்டு என கவனியுங்கள்

400 ஆண்டுகள்

உலகம் உருண்டை, சூரியனை மைய்யமாக கொண்டு பூமி சுழல்கிறது என்று சொன்ன கலிலீயோவை 400 ஆண்டுகள் கழித்து அங்கீகரித்திருக்கிறது உலகின் கிருத்துவ அங்கீகார வாடிகன் அரசு.

மக்களோடு வாழ்ந்த வானவியல் அறிஞரை இவர்கள் என்ன அங்கீரிப்பது.  அவரின் தொலைநோக்கு கருவியை மக்களும், அறிவியலாளர்களும் அங்கீகரித்து 400 ஆண்டுகள் ஆகி விட்டது.

இப்போது இவர்கள் அங்கீகரிப்பதால் அறிவியல் மதத்தின் கட்டுபாட்டில் இருந்ததையும், அவர்கள் அங்கீகாரம் இல்லாது மக்களை சென்றடையாது என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மத வாதிகள் தோற்கும் போதெல்லாம் சமரசம் செய்து கொள்வார்கள்.  அதனால்தான் கலிலீயோவிற்கு இன்று அங்கீகாரம்

வியாழன், ஏப்ரல் 14

78%

தமிழக வரலாற்றின் முதல் முறையாக 78 % மேல் வாக்குபதிவு நடந்ததாக செய்தி.  புரியவில்லை, விலைவாசி ஏற்றம், ஏழ்மை, கல்வி மறுப்பு இத்தனை இருந்தும் மக்கள் இன்னும் இந்த ஜனநாயகத்தை நம்புகின்றனர்.

போன தேர்தலில் 1 லட்சத்தோடு வந்தவன் 6 கோடியுடன் மதிப்போடு மீண்டும் போட்டியிடுகிறான்

ஓட்டு போடாதே என்று தெரிந்தவர்கள், பார்த்தவர்கள் என பலரிடம் சொல்லியும் இந்த % கொஞ்சம் வேதனை பட வைத்தது

என்ன செய்வது மக்கள் இருக்கிற கொள்ளியில் எது நல்லது என தேர்ந்தெடுக்க முடிவெடுத்தால் நாம் என்ன செய்ய முடியும்

திங்கள், ஏப்ரல் 11

உரிமையோ உரிமை

ஏப்ரல் 13 உனது உரிமையை பதிவு செய்யும் நாள் இப்படி ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

எது உரிமை என்றேன்.  வாக்களிப்பது
அதுமட்டுமா? அதற்கப்புறம்

பெத்துக்கறது மட்டும் உரிமையென்று பிள்ளையை விட்டு விட்டு செல்வாயா அல்லது நல்லது கெட்டது சொல்லி வளர்ப்பாயா? தவறு எனில் அடித்து திருத்துவாயா அல்ல

பெத்ததோடு உரிமை முடிந்ததென்று விட்டு விடுவாயா என்றேன்

ஓட்டு போடுவது உரிமை என்றால் தவறு செய்தவனை தட்டிக் கேட்க உரிமையில்லை.  தவறு செய்தவனை திரும்ப அழைக்க உரிமையில்லை, அவனுக்கு பதில் புதியவனை தேர்ந்தெடுக்க உரிமையில்லை. இந்த உரிமையெல்லாம் எப்போ கிடைக்குமோ அப்போ

ஓட்டு போடுவோம்

அதுவரை
அந்த உரிமை பெற போராடுவோம்

சனி, ஏப்ரல் 2

இந்துத்துவம்

இன்று ஒரு குறுந்தகவல் எனக்கு வந்தது. அது இன்றைய கிரிக்கெட்டை பற்றியது.
The current circket World cup situation between IND Vs SRL as this:  India (Ram) married World cup (Sita) in 1983 and in 1996 Srilanka (Raavan) took away Sita (World cup).  Now after 14 years of Vanvaas, they meet again and you know the result.

நிச்சயமாக இது சில ஆயிரம் பெயரையாவது சென்றடைந்திருக்கும்.  கைபேசியிலிருந்து வேறு யாருக்கும் அனுப்ப மனமில்லை எனினும் எனது கருத்து.

இது விளையாட்டு ஆனால் அது அணுகப்படும் விதம் இராமன் இராவணன், சீதா.  என இந்துத்துவா திணிக்கப்படுகிறது.

மதம் என்பது அபின் என்றார் மார்க்ஸ்.  அந்த போதையில்தான் 14 ஆண்டுகள் கழித்து இராவணனிடமிருந்து சீதையை திரும்ப பெற இந்திய இராமன்கள் பாடுபடுகிறார்கள்.

நாம் சொல்வோம் இத்தனை ஆண்டுகள் கழித்து திரும்ப அழைப்பது நன்றாக இருக்காது சீதை இராவணனோடே வாழட்டும் என்று

அது சரி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கைமாறும் சீதையை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்

திங்கள், மார்ச் 21

முத்துப் பல்லழகி

முத்துப் பல்லழகி
மோகனச் சொல்லழகி
சித்தம் கலங்குதடி
சிரித்திடும் அழகிலடி

நித்தம் யோசனையடி
நீயெனக்கு சொந்தமென
தத்தம் செய்வாயோ
தடையென உரைப்பாயோ

ஆசை அடங்கலடி
ஆதலினால் வேணுமடி
மீசை துடிக்குதடி
மிச்சமும் உள்ளதடி

ஆவணம் செய்வாயென
ஆவலாய் இருக்கிறேனடி
தவணைத் தரலாமென
தள்ளிப் போடாதடி


அ. வேல்முருகன்

எங்கு சென்றாய் என்னவளே...

மங்கும் மாலை யெல்லாம்
         மங்கை உனது நினைவுதான்
அங்கு மிங்கும் சுற்றிய
         அந்த பொழுது இனிமைதான்
எங்கு சென்றாய் என்னவளே
         எதிலும் உனைநான் தேடுகிறேன்

தங்கமே உன்னை காணாது
         தவிப்பவனை தணிக்க வாராயோ
திங்கள் கடந்தும் அன்பே
         திசைதான் மறந்து போனாயோ
அங்கம் மெலிய அவரவர்
         ஆரிவன் என்று கேட்கின்றனர்

சித்திரமே என்சொத்து பத்திரமே
         சீக்கிரம் வந்திடு அருகே
நித்திரையும் எனக்கு சித்திரவதையே
         நீயிங்கு இல்லை உயிரே
முத்திரையாய் நின்னிதழ் பதித்தால்
         மூச்சுக்கு உத்திர வாதமே

கனவா?......... பேராசையா?........





மணமுடித்த மங்கையான்
        மனதில் கொண்டது ஆசையா
கனவாகும் காரணத்தால்
       கணக்குப் படியவை பேராசை
என்னவென கேள்வியால்
       ஏறிட்டு நோக்கும் விழிகளே
கணக்கிடும் தோல்வியால்
       கவலை தீரவும் வழியில்லை

கணவனுடன் கைக்கோர்த்து
        காலாற நடந்து மாலை
மணக்கும் மல்லிகை
         மரிக்கொழுந்துச் சூடி நல்ல
வண்ணத் திரைப்படம்
       வரும்வழியில் நல்உண வோடு
மென்பனிக் கூழருந்தி
        மஞ்சத்தில் மகிழ கனவு

வாக்கப்பட்ட மனுசனுக்கு
        வடித்துக் கொட்டி வசவுவாங்க
ஏக்கப்பட்ட மனதுக்குள்
        ஏகப்பட்டக் காயங்கள் உருவாக
ஆக்கப்பட்டக் கனவுகள்
       ஆப்பறைந்து யாவும் சருகாக
தாக்கப்பட்ட உணர்வுகள்
       தென்றலாய் மீண்டும் வருமோ

உள்ளக் கொதிப்பை
        உறவிடத்தில் சொல்லிக் கலங்கிட
தள்ளியது குழியென்று
       தானும் சேர்ந்து மருகிட
சொல்லியக் கனவுகளை
       சொந்தம் ஒருநாள் செய்திட்டு
மெல்லக் கூறியது
       மகளே இப்போது மகிழ்ச்சியா

இணையோ இதமோ
        இவர்கள் செய்வது எனக்கு
துணைதான் என்றாலும்
         துணையிணைப் போல வருமா
தொலைந்தது கிடைக்குமா
        துவளும் உள்ளத்தின் ஏக்கவினா
வலையில் விழுந்தபின்
        வாழ்க்கையை நினைப்பது வண்ணகனா

புதன், மார்ச் 16

ஓட்டு போடாதே

இந்த சொல் 80 களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் மூலம் அறிமுகமாகியது.  ஓட்டு போடும் வயது வந்த பருவம்.  அவர்கள் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக எனக்கு பட்டது.  அதிலிருந்து இன்றுவரை எந்தவொரு தேர்தலிலும் என்னுடைய கைவிரலை கரையாக்கிக் கொண்டதில்லை.

எத்தனையோ நண்பர்கள் உரிமை என்றனர். மற்றவர் கடமை என்றனர். மகஇக மட்டும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் உனக்கு வரும் போது தவறு செய்யும் இவர்களை திருப்பி அனுப்பும் உரிமை உனக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

வீட்டு அனுப்பும் உரிமை 356 பிரிவுக்கு உள்ளது.  முனுமுனுக்க கூட உனக்கு உரிமையில்லை. உரிமையில்லாததில் உனக்கென் வம்பு.

அரசியல் மக்களுக்கான சேவை என்பதிலிருந்து தொழில் என மாறி நீண்ட நாட்களாகி விட்டது எனவேதான் தேர்தல் ஆணையமும் ரூ.16 இலட்சம் மூதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது.  மூதலீடு மூழ்கிபோகலாம் அல்லது 300 மடங்காகவும் மாறலாம்

4 பேர் மூழ்க போகிறான். ஒருவன் 300 மடங்கு சாம்பாதிக்க போகிறான்.  நடுவில் நாம் எதற்கு எனவே அனைவரும்

ஓட்டு போட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

ஞாயிறு, மார்ச் 6

குழந்தை தேடிய கடவுள்

கடந்த ஞாயிறு
அடர்ந்த முடிதிருத்த
அகவை ஏழுகொண்ட
அருணனை
அழைத்துச் சென்றேன்

அருகிலிருந்த அங்காடியில்
வண்ண மீன்கள்
காதல் பறவைகள்
அவற்றோடு 
கோழிக் குஞ்சுகள்

ஆடிக் குதிக்கும் பருவத்தில்
ஆசை பிறந்தது
ஓரு குஞ்சு வளர்க்க
ஆயிரம் காரணம் சொல்லியும்
அடம் பிடித்ததால்
ஆகட்டுமென ஒன்று வாங்கினேன்

இருக்கும் மனிதருக்கே
இடப் பற்றாக்குறை
இதில் இரண்டாம்தளம் வேறு
இங்குமங்கும் பார்த்து
பலகனியில் இட ஓதுக்கீடு

கோதுமை அரிசி குருணை
குடிக்க தண்ணீர் என
குதுகல ஆரம்பம்

கோழிக்குஞ்சு வந்ததை
குடியிருப்பிலுள்ள
குட்டிக்களுக்கு தெரிவிக்க
அவர்களும் விஜயம்

அருணன்
படிப்பை மறந்தான்
விளையாட்டை மறந்தான்
நண்பர்களை மறந்தான்
ஆம் 
அவனுக்கு
தோழனாக
விளையாட்டு பொருளாக
ஆனது கோழிக்குஞ்சு

காலை கண்விழித்து
வணக்கம் சொல்வது
கொஞ்சுவது எல்லாம்
எங்களையல்ல... 
கோழிக்குஞ்சை 

மாலை பள்ளி விட்டதும்
அம்மாவை கேட்பது
கோழி சாப்பிட்டதா
தண்ணீர் குடித்ததா

இரவிலும் 
இதே கதை
அம்மா போ
எனது குட்டிக் கோழிக்கு
சாப்பாடு ஊட்டு

மகனின்
அன்பையும்
அதிகாரத்தையும் கண்டு
அவளுக்கு பூரிப்பு

அருகிலமர்ந்து
ஆனந்தப்பட்டு
தாவி மேலேறி
தவழ்நத அக்குஞ்சு
இன்றில்லை

ஏனம்மா செத்து போச்சு
உயிர் வராதா
ஒரே சோகம்

வாடிய முகம்
காலை உணவை மறுத்து
கவலையோடு உட்கார்ந்திருக்கிறது

அப்போதுதான் கேட்டான்
அம்மா 
கடவுள் உயிர் கொடுக்க மாட்டாரா

அம்மாவோ
செத்த பிறகு 
உயிரேது என்றாள்

ஆம் 
இருப்பவன் 
செய்த உயிரை
இல்லாதவன்
எப்படித் தரமுடியும்







மனிதம்

மனிதன் எந்த நிலையிலும் மனிதன்தான்.  கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை.  அலுவல உதவியாளனாய் ஒருவன் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிகிறான்.  அவனுடைய வேலை தண்ணீர், டீ கொடுப்பது அலுவலக கோப்புகளை கொண்டுவருவது.  என்னில் மூத்தவர், நிறுவனத்தின் நலனில் அக்கறை கொண்டவர் அந்த குறிப்பிட்ட உதவியாளன் கோப்புகளை எடுக்க அவர் அறைக்கு வரக் கூடாது அல்லது அலமாரியை அவர் அறைக்கு வெளியே வைக்க சொல்லிவிட்டார்.

ஏன் எதனால் இந்த செயல் அவருக்கே வெளிச்சம்


H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...